Friday, October 29, 2021

உடல் நீத்தாரை என் செய்வது? நீத்தார் சடங்குகள் சொல்லும் உண்மை என்ன ?

 


சமணர்களும் இந்துக்களும் வடக்கு / வடகிழக்கு நோக்கி தொழுவார்கள். கடைசியில் வடக்கிருந்து உயிர் விடுவர். வடகிழக்கில் உள்ள பேருலகங்களில் தேவரும் முனிவரும் சித்தரும் யோகிகளும் வாழ்கிறார்கள் என்று நம்புகின்றனர்.

ஆசிய மதங்கள் (கிருத்துவம் உட்பட) எல்லாம் நீத்தார் வழிபாடு உடையன. சடங்கு சம்பிரதாயங்கள் மாறும். ஆனால் அடிப்படையில் நீத்தார் வீடுபேறு பெற வேண்டும். ஆவி உருவத்தில் அலையகூடாது. நம் அன்பால் திருப்தி அடைந்து தெய்வநிலை அடைய வேண்டும். ஒருவர் தெய்வநிலை அடைந்து விட்டார் என்று பலர் உள்ளுணர்வால் அறியுமிடத்து அவருக்கு கோயில் கட்டி வழிபாடு செய்வர். 40000 முதல் 200000 வருடங்கள் இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை அமெரிக்கா முதல் ஜப்பான் வரை இப்பழக்கம் உள்ளது.

மேலை நாடுகளில் ( ரஷ்யா முதல் பிரிட்டன் வரை) கூட இது இருந்தது. குளிர் பிரதேசங்கள் ஆதலால் தடையங்கள் குறைவு. அவ்வளவே. 

இது ஹிந்து மட்டுமல்ல, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயத்திலும் முக்கியமான கேள்வி. 
நபிகள் இதை கொஞ்சம் திருத்தி ஐந்தாம் நாளில் பரம கருணையாளன் அல்லாவின் முழு ஆணைக்குள் அவர்கள் சென்றார்கள் என்று நம்பி, சடங்குகள் வேண்டாம். நீத்தார் இறையருள் பெற அல்லாவை அடைய தர்மம் செய்க என்றார். அது மத்திய கிழக்கிற்கு ஏற்றது. மற்ற இடங்களில் எல்லாம் நீத்தார் சடங்குகளை யாரும் விடுவதில்லை.
 கிறித்தவம், இசாயாவோ (jesus) அல்லது அவரது தூதுவரோ வரும் வரையில் நீத்தாரை நீள் உறக்கத்தில் ( ட்ரினிட்டியை ஜபித்து கொண்டு ) ஆழ்த்துகிறது..

இறந்தவர்களை புதைப்பது, எரிப்பது என்று நிறைய வேறுபாடுகள் உள்ளன.
இறந்தவர்களை புதைப்பதா , எரிப்பதா ?

எரிப்பதா புதைப்பதா என்பதை இன்றிருக்கும் வழக்கத்தால் பார்க்க முடியாது. இந்து மதங்களில் முறை ஒன்று இருந்தது. வயது வராதோரை, தெய்வநிலை அடைந்தவரை புதைப்பர். கோயில் கட்டுவர். மற்றவரை எரிப்பர். ஆசை அடங்காமல் இருக்கும் உயிர் நிலையில் எரித்து விடுவர். அவருக்கும் நல்லது. மற்றவருக்கும் நல்லது. 

சில வீடுகளில் பூஜை அறையில் சாமி படங்களுடன் நீத்தார் போட்டோவையும் மாட்டி கும்பிடுகிறார்களே இது சரியா?

பித்ரு வழிபாட்டு முறைகளை / நீத்தார் சடங்குகளை  ஆழப்படித்தால் இதில் உள்ள தவறு புரியும். 


நமது பித்ருக்கள் ஆனாலும் இடமாக மரித்து தான் தர்ப்பணம்.. தர்ப்பணம் முடிந்தவுடன் பவித்ரத்தை அவிழ்த்து வடக்கு பக்கம் வைத்து விடுகிறோம். ஸ்மார்த்தர்கள் விபூதி அணியாமல் தர்ப்பணம் செய்கிறோம். பித்ருக்களில் கரையேறி தேவர்களாகவும் யோகிகளாகவும் மாறியவர்களும் உண்டு. மனிதரிலிருந்து கோர ரூபம் கொண்டு வாழ்பவர்கள் வரை பல வகை உண்டு. நமக்கு பல விஷயங்கள் தெளிவாக தெரியாததால் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த பட்டிருக்கிறது.. தவறாக செய்வது நமக்கும் பித்ருகளுக்கும் கேடு விளையும். இவை யாவும் பித்ரு பூஜை மந்திரங்கள் சொல்லும் உண்மை.

ஏன் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த படுகிறது என்பது பிரகலாதன் வாழ்க்கையில்  உள்ளது. இரணியகசிபு போன்ற பேரரக்கர்கள் நமது தவறுகளால் தான் உருவாகிறார்கள். கலியுகத்தில் நன்றாக புரியும்.

பொதுவாகமூன்று தலைமுறைக்கு நீத்தாரை ( வயது வராதோர், தெய்வநிலை அடைந்தோர் தவிர) நாம் தெய்வங்களுடன் சேர்ப்பதில்லை. திதி முதலிய சடங்குகள் செய்து அன்பால் கட்டி தெய்வ உலகங்கள் நோக்கி ( ஈசானம்/வடகிழக்கு) செலுத்துகிறோம்.

தெய்வ நிலை கொண்டோர் பற்றி கவலை இல்லை. ஆனால் பொது விதி ஒன்றுதான்.. அது சமூகம் நன்றாக இருக்க வேண்டும். கோர அரக்கர்கள் ஏற்பட கூடாது என்பதற்காக மட்டுமே... 

தலைமுறை என்ன கணக்கு? அவரவர் பாவ, புண்ணியம் அதற்குள் மறுபிறவி பெற்று விடும் என்பது தானே இந்து தத்துவம்?

இது ஆழமான கேள்வி. பதில் பல அத்தியாயங்கள் கொண்டது. பௌதீக / உயிர்நிலை படிகள் கொண்டது.. மூன்று தலைமுறை என்பது ஆவி உருவம், காக்கும் கடவுள் (ருத்திரன் ), தெய்வநிலை (பானு / ஆதித்யன் /ஞான சூரியன் ) என்ற உயிர் நிலை அடுக்குகளையும் மனோமய, விஞ்ஞான மய, ஆனந்தமய நிலைகளையும் குறிக்கிறது.. 

"குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்தறிவார் சிவ யோகிகளே , காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே" - அருணகிரி.

எனது கட்டுரை தளத்தில் இதை விளக்க முற்படுகிறேன்..

https://bharathavamsavali.blogspot.com/2021/08/blog-post.html

https://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post_8.html

https://bharathavamsavali.blogspot.com/2021/09/mantra-pushpam.html

https://bharathavamsavali.blogspot.com/2021/09/why-smartha-brahmins-dont-touch-agama.html

https://bharathavamsavali.blogspot.com/2021/07/rahu-and-kethu-virtual-planetsgrahas-of.html

https://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html

https://bharathavamsavali.blogspot.com/2021/07/agnihotra-science-of-using-cosmic.html

https://bharathavamsavali.blogspot.com/2021/07/sandhya-science-of-soul-space-planetary.html

https://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post_8.html

https://bharathavamsavali.blogspot.com/2021/06/yoga-benefits-and-pitfalls.html

https://bharathavamsavali.blogspot.com/2021/06/why-constellation-of-scorpio-and-stars.html

https://bharathavamsavali.blogspot.com/2021/06/why-north-star-vega-is-important.html

https://bharathavamsavali.blogspot.com/2020/01/sahasra-yojana-teshaam-sahasra-yojane.html

சைவ ப்ராஹ்மணர்கள் சிவனிற்கு அளிக்காத உணவை நீத்தாருக்கு அளிக்க மாட்டார்கள். சிவனை நிந்தனை செய்பவர் வர வேண்டாம் என்று பொருள். சிவனை நம்பி வா என்று அன்பால் கட்டி இழுக்கிறார்கள்... வைஷ்ணவரும் அவ்வாரே. ஸ்மார்த்த ப்ராஹ்மணர்கள் விபூதி முதலிய சின்னங்கள் அணியாமல் பித்ரு / நீத்தாருக்கு அன்னம் அளிப்போம். அன்னமய / பிராணமய உயிர் நிலையில் சிக்கி தவிக்கும் நீத்தாரை (அவர்கள் கோர பூதங்களாக / இரக்கமில்லா அரக்கராக இருந்தாலும் ) அன்பால் கட்டி, கடைசியில் சிவ/விஷ்ணு உலகங்களுக்கு இழுத்து செல்வோம். வேறு வழியில்லை.. 

ஆவி உருவத்திலிருந்து அன்னமய / பிராண மய உடலும் பெற முடியும். இந்த கேள்வி தொகுப்பு அந்த நிலையில் மாட்டி கொண்ட உயிர்களை என்ன செய்வது என்பது பற்றியே.. அது நிஜமான கவலை. தனது உறவினரை/நண்பரை இழந்த ஒவ்வொருவரும் படும் கவலை.. அக்கவலைக்கு சிவபிரான்/விஷ்ணு மருந்தளித்துள்ளார்.. இதை செய் கவலையிலிருந்து விடுபடுவாய் என்று சொல்லியுள்ளார்.. 

பெரும்பாலான பித்ரு கர்மாக்கள் விஷ்ணுவின்  ஆணையின்படி என்று தான் ஆரம்பிக்கிறது..

பெரும்பாலான தேவ/தெய்வ காரியங்களும்  விஷ்ணுவை (ததேவ லக்னம் சுதினம் ததேவ, தாரா பலம் சந்திர பலம் ததேவ, வித்யா பலம் தெய்வ பலம்  ததேவ, லக்ஷ்மி பதேஹே தேமக்ரியுகம் ஸ்மாராமி ) நினைத்தபின் செய்யப்படுகின்றன...

நால்வரும் மற்றோரும் உலகை குழப்ப எழுதவில்லை. குழம்புவது நம் இயல்பு. எல்லா இடத்திலும் புது விஞ்ஞானம் பைத்தியம் பிடிக்கவே வைக்கிறது. தெளிவு நம் உயிர்நிலையில், அத்வைத நிலையில் மட்டுமே உள்ளது... மாணிக்க வாசகரை மறந்து ஒரு பயனும் இல்லை.

இறப்பதற்கு முன்/பின் என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் இறப்பதற்கு முன் அவர் தெய்வ பலம் உடையவராயின், தேவ / தெய்வ உயிர்கள் அவரை காக்க (கீதையில் கண்ணன் சொன்னது போல்) வரும். 

உலகாயதமான மனிதர்கள், பிறப்பிலிருந்து முக்தியை தேடாதவர்களுக்கு அவரது மரணிக்கும் தருவாயில், நாம் நம்மாலான தெய்வ ஆசீர்வாத பொருள்களை அளிக்க வேண்டும். நமக்கு தெரியாவிடில் தெரிந்தவரை கேட்டு செய்யலாம். செய்ய வேண்டும்..

இறந்தபின் குல வழக்கப்படி பல ஹோமங்கள் (திதி நக்ஷத்திர நிலையின்படி ), உடலை புனித படுத்துதல், உயிரை திருப்தி படுத்துதல், சுற்றி இருப்பவரை திருப்தி படுத்துதல், உடலை அக்னியில் / மண்ணில் சேர்த்தல்,  அவரது உலக சூழ்நிலை / மனநிலை பொறுத்து பூத பலி / ப்ரபூத பலி செய்தல், அஸ்தியின் மிச்சத்தை இயற்கையில் சேர்த்தல் போன்றவை  செய்வார்கள். அது மற்ற கோர உயிர்கள் அவரை சேர்த்து கொள்ளாமல் போகுமிடத்து செய்யப்படுவது தான்.

பின்னர் முதல் நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை அவ்வுயிர்க்கு / உடல் இருப்பதாக பாவித்து /அன்னமிட்டு, நீரிட்டு (பாஷாண கல்லிற்கு / நடுகல் ) திருப்தி படுத்துவர். பத்தாம் நாள் எல்லா உறவினரும் / நண்பரும் அன்னமிட்டு இந்த உலக வாழ்க்கையை முடித்து வைப்பார்.

பதினொன்றாம் நாள் தொடங்கி, குல வழக்கப்படி திதி முறைப்படி அன்னமிடுவர். குல வழக்கப்படி, பிரேத உடலிலிருந்து உயிரை பிரித்து யமனிடம் / இயற்கையிடம் சேர்ப்பர். சைவர்கள் நந்தியை அழைத்து ஸ்ரீ ருத்திரம் சொல்லி சிவ உலகம் அழைத்து செல்ல ப்ரார்த்திப்பர். அது அவரவர் கர்மவினையால் நடக்கவும் செய்யலாம். உலக பிடிப்பு கொண்ட ஆன்மாவானது சிக்கி கொண்டும் தவிக்கலாம். அப்படி தவிக்கும் ஆன்மாவை பன்னிரெண்டாம் நாள் தொடங்கி அன்னமய /பிராணமய உலகத்தில் மாட்டி கொள்ளாமல் செய்ய, குலத்தில் முன்னோராகிய மனோமய/விஞ்ஞானமய/ஆனந்தமயமான உயிர்களை அழைத்து அவர்களுடன் அன்பால் அன்னமிட்டு கட்டி தேவ / தெய்வ உலகங்கள் / உயிர் நிலைகள் நோக்கி அனுப்புவர். முக்கியமான இறப்பு திதி, சந்திர மற்றும் சூர்ய மண்டல எல்லை நாட்கள் அன்று அன்னமிட்டு முன்னோர்களுடன் கட்டுவர்.

வருட இறுதியில், இந்த சூரிய உலகின் ஞான பானுவின் கட்டுப்பாட்டில் வரும் உயிரை அன்னமிட்டு கட்டி, பல தருமங்கள் செய்து, சிவ/விஷ்ணு உலகங்களுக்கு/உயிர்நிலைக்கு அனுப்புவர்.

இறந்தவர், கர்த்தா ( கர்மத்தை இயற்றுபவர் ) செய்த தவமோ / புண்ணிய பலனோ இதை நடத்தி அந்த உயிர் தப்பிச்செல்ல உதவலாம்.

கர்த்தா, நீத்தார்/பித்ரு கருமத்தை சரியாக செய்தாலும், பல தடைகள் இருப்பதால் எல்லா உயிரும் நேராக மேல் உலகங்கள் / மேல் உயிர்நிலைகள் அடைவதில்லை... இயற்கை விதி அதுவே.

அதனாலேயே அமாவாசையன்று விபூதி அணியாமல் தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம், வருடமொருமுறை அன்னமிட்டு திதி, போன்ற கர்மாக்களை வேறு வேறு குல முறைப்படி செய்கிறோம்... 

பித்ருக்களில் கரையேறி தேவர்களாகவும் யோகிகளாகவும் மாறியவர்களும் உண்டு. மனிதரிலிருந்து கோர ரூபம் கொண்டு வாழ்பவர்கள் வரை பல வகை உண்டு. நமக்கு பல விஷயங்கள் தெளிவாக தெரியாததால் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த பட்டிருக்கிறது.. தவறாக செய்வது நமக்கும் பித்ருகளுக்கும் கேடு விளையும். இவை யாவும் பித்ரு பூஜை மந்திரங்கள் சொல்லும் உண்மை.

ஏன் பித்ரு பூஜை தனியாக முறை படுத்த படுகிறது என்பது பிரகலாதன் வாழ்க்கையில்  உள்ளது. இரணியகசிபு போன்ற பேரரக்கர்கள் நமது தவறுகளால் தான் உருவாகிறார்கள். கலியுகத்தில் நன்றாக புரியும்.

பொதுவாக, மூன்று தலைமுறைக்கு நீத்தாரை ( வயது வராதோர், தெய்வநிலை அடைந்தோர் தவிர) நாம் தெய்வங்களுடன் சேர்ப்பதில்லை. திதி முதலிய சடங்குகள் செய்து அன்பால் கட்டி தெய்வ உலகங்கள் நோக்கி ( ஈசானம்/வடகிழக்கு) செலுத்துகிறோம்.

தெய்வ நிலை கொண்டோர் பற்றி கவலை இல்லை. ஆனால் பொது விதி ஒன்றுதான்.. அது சமூகம் நன்றாக இருக்க வேண்டும். கோர அரக்கர்கள் ஏற்பட கூடாது என்பதற்காக மட்டுமே...

14 உலகமா / உயிர்நிலையா ?

14 உலகங்களை பௌதீகமாக ஏற்று கொள்ளாதவர்கள் உயிர் நிலை என்று ஏற்று கொள்ளலாம். அதுவே சித்தர், சமணர், அத்வைத சைவம் ஏற்பது..

எவ்வளவு அறிவியல் பூர்வமான மதத்தை இப்படி பாழ்படுத்தி கொண்டு இருக்கிறோம்.?

இந்து மதம் எங்கே போகிறது என்பதை இது காட்டுகிறது. 




ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

சிவோஹம்.

ஹரி ஓம்








https://en.wikipedia.org/wiki/Sa%E1%B9%83s%C4%81ra

https://www.youtube.com/watch?v=nRTWBnKyqp8


Thursday, October 21, 2021

The Time of Adi Shankaracharya - ஆதி சங்கரரின் காலம்

 


The Acharyas of The Shri Kanchi Kamakoti Peetham start with Adi Sankara..

Sl No. Name Place of Birth Place of Attainment of Samadhi Year of Siddhi-(Christian era) Duration of Pontificate
1) Sri Sankara Bhagavatpada Kaladi Kanchi 477 B.C. Founder and First Head of Kanchi Math 38) Abhinava Sankara Chidambaram, Himalayas Dattatreya cave, 840 A.D. 30 years

Abhinava sankara is always considered as Adi Sankara by historians as the history before 800 AD is not clear in other four mutts other than kanchi due to deterioration or vandalism during 400 BC to 800 AD.

For indians and Hindus, this timing in history (400 BC) is important as Buddhism was at its peak whereas in 800 AD only Jainism was alive. Adi Sankara and Gowdapada's theory was targeted at Buddhism. Westerners who want to undermine early Hinduism, post  shankara hindu thought have propagated this  wrong era for shankara thereby helping the anti-hindus in India. Some anti hindu intellectuals undermine the proof saying there was no Hinduism / smartha Advaita religion before 800 AD. Thereby helping many sects of Hinduism to split away from Hinduism saying they are older - e.g tamil  Siddhanta saivam. Lets spread this message of the time of adi Shankaracharya which is marked crucial by all 5 mutts as this has direct relevance on indian/hindu  unity...








https://www.kamakoti.org/souv/3-11.html

https://www.thehindu.com/news/national/government-wrong-on-adi-shankaras-birth-year-kanchi-seer/article7908827.ece

http://swamiindology.blogspot.com/2014/08/adi-shankara-mysterious-sundara-pandya.html

https://tamilandvedas.com/tag/dravida-sisu/

https://tamilandvedas.com/tag/ramana-on-dravida-sisu/

https://youtu.be/mLocEECoXjI


Sunday, October 10, 2021

Yagna Upaveeda, Brahma Knot, Yoga Chakras, Kundalini, Endocrine Glands, 3 Worlds, 7 Worlds, Electromagnetic Waves/Fields, Adityas, Gnana Bhanu

 


The life force (Kundalini) bound to the human body travels or attains the transformation level through the seven yoga chakras (Endocrine or ductless glands). The endocrine glands are activated by the pituitary and the body chakras by its own gland secretions and electromagnetic / cosmic - waves / fields.


Modern medicine knows only about 1 percent of endocrine glands.

The inner world of magical power, invisible to the naked eye, is here.

This is what we call the Subramanya creation.

The chakra waves that connect every human life with the universe and the seven worlds to get rid of 3 residuals of arrogance, greed and delusion.

As the brain is controlled by nerves, the endocrine glands create a control system by generating a snake-like tangled electromagnetic field (energy field) around itself. Spinal cord is not directly related to this. Idakalai - Five (Ganapathy/Ganesh) and Pingalai - Six (Subramanyan/Murugan) fields are simulated as Rudras. Everyone can know these by meditative feeling.




Sushumna field (Brahma Dhandam) can be known by the grace of the Guru. In the Bhaghavad Gita, Lord Krishna said to Arjuna (15:1), "The soul is said to be the eternal asvattam (pipal) tree with its roots up and its branches down. Its leaves are sound meters / sound bheejams / sound seeds. He who knows it is the one who knows the scriptures."




This refers to the asvatta thanda (for penance) given during Upanayana.




Sage Tathisi used his Brahma wand (sushmna, thanda, the backbone of the universe) to help Indra create a powerful weapon and destroy the demons, realizing that we can suppress the senses and destroy the demonic forces by the Brahma wand/thandam ...

Pranayama (breath or suppression control of life force) clarifies to us the bounds of our life / limits of prana factor of our life. It makes us deeply understand why we are bound to this world. You can feel the contraction of the senses in the kumbhagha (holding the breath) stage. In this state the bonds of the mind are untied by the Guru and the mind becomes a factor of salvation. The mind is the rope that binds man, and that is also the cause of salvation.

In this world, when life realizes these twelve soul forces/spaces, it becomes the instrument of the Dvadasa (12) Adityas who live for us in this solar system.





In this state the form/state, Brahmatvam/Saguna Brahma siddhi is attained. Soul visits/perceives Sukshma Banu (Brahma Knot) who lives in this solar system called Vrusha Banu.




This is what Gayatri and the 3 worlds (the three-threaded Yajna upaveeda, the three duties (forefathers, rishis, devas)), the three carnal sins (arrogance, greed and delusion) ) symbolize.
The seven worlds can be reached beyond the three worlds.


https://onestoryavenue.com/the-seven-chakras/

https://www.organicindiaclean.com/blog7.html

https://yogabylily.com/chakras-and-the-endocrine-system

https://en.wikipedia.org/wiki/Adityas

12 Adityas based on Divine Roles as per Satapatha Brahmana

  1. Yama
  2. Aryaman
  3. Indra
  4. Ravi
  5. Varuṇa
  6. Dhātṛ
  7. Bhaga
  8. Savitṛ
  9. Sūrya or Arka
  10. Aṃśa
  11. Mitra
  12. Dakṣa

12 Adityas based on gunas or features

Keshavan, Narayanan, Madhavan, Govindan, Vishnu, Madhusoodanan, Trivikraman, Vamanan, Sreedharan, Hrishikesan, Padmanabhan and Damodharan


Friday, October 8, 2021

துர்கை - பிரபஞ்ச சக்தி கூட்டும் விஞ்ஞானம் - சாமானியர்களுக்கான உருவகமும் ஆன்மீகமும்

 


இந்த பேரண்டத்தின் அழிவு சக்தி கணக்கிட முடியாதது. இயற்கையின் ஆக்க அழிவு செயல்பாடுகள், ஒரு கோளில் உயிர் சமநிலையை பாழ்படுத்தும் சூழல் உள்ளது. இயற்கையின் காரண காரிய விதிகள் ஒவ்வொரு கணமும் கண்ணுக்கு தெரிவதில்லை. ஒரு சமன்படுத்தும் சக்தி இல்லாதபொழுது (உயிர் சக்தியை கொடுத்தும், கெடுத்தும் காக்கும் வகையில்), நல்லதும் தீயதும் தற்காப்பு இல்லாததாக உள்ளது.


"அக்னியின் நிறத்தில் இருப்பவளும், தவத்தினால் ஜொலிப்பவளும், அக்னியிலே பிறந்தவளும், கர்மத்தின் பலனை அளிப்பவளும், அப்பலனால் துதிக்கப்படுபவளும் ஆகிய துர்கையின் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்"

காலம் காலமாக எவ்வாறாகிலும் துதிப்பவர்களுக்கும், துதிக்கப்படுபவர்களுக்கும், அவர்களது தியானத்தின்/தவத்தின் ஒரு சாவி இருக்குமானால், அவ்வுயிர்களின் எல்லையில்லா நித்ய அன்பிற்கு ஒரு ஒளி வழிப்பாதை இருக்குமானால், நொடி பொழுதில் ஒரு உயிர் சக்தியை உருவாக்க இயலும்!!!

காலம் இப்பிரபஞ்சத்தை இயக்குவதால், நிர்ணயிப்பதால், துர்கை, தீயவற்றை காலவெள்ளத்திலும், துதிப்பவரை தன்னுள்ளும் இணைக்கிறாள். நொடியில் அவர்களது கர்மத்தின் பலனை அளிக்கிறாள்!!




தேவர்களின் சமன்பாட்டு சக்தி/பொறி அவள்.



இது எவ்வாறு சாத்தியமாகும் ?

குவார்க்குகள் மற்றும் ஹிந்து  பிரபஞ்ச இயல் பற்றிய ஆக்கங்களை இந்த வலை தளத்தில் படிக்கவும்.

6 குவார்க் பேரண்டத்தில் உள்ளது. 

காணாபத்யம் - மேன்மை கட்டுப்பாட்டாளர் - யோக நிலை குரு - உயிர்நிலை வழிபாடு - தாழ் (bottom) குவார்க்.
மேல் - சைவம் (condensed matter /consciouness)

கீழ் - சாக்தம் (energy form)

உயர் - சூர்யம் (condensed matter /consciouness)

தாழ் - காணாபத்யம் (energy form)

விசித்திரம் - குமரன் (energy form)

தகை - விஷ்ணு (condensed matter /consciouness)


நவீன அணுத்துகள் அறிவியலை இதோடு பொருத்துமிடத்து, பல குவார்க்குகள் ஒன்று சேர்ந்து பொருள் (மேட்டர்) தன்மையை உருவாக்குகிறது (காரணம் தெரியாமல் / சக்தியிலிருந்து (எனர்ஜி) புது பொருள் உருவாக்கம்  ) என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

நவீன அறிவியலில் இதை Hadronization என்கிறார்கள்.

உயர் குவார்க் (சூர்யம்) Hadronize ஆவதில்லை. மாறாக சிதைந்து விடுகிறது. இது விண்மீன்களின் நிலையை குறிக்கிறது பொதுவாக.. 

ஆனால் கடல் குவார்க்குகள் (துர்கா), baryonic or mesonic துகள்களாக (அதிக சக்தி துகள்கள்) hadronize  ஆகின்றன, சில நேரங்களிலும்/சூழ்நிலைகளில்  மட்டும்.

கடல் குவார்க்குகள் பொருளையோ/சக்தியையோ தன்னிச்சையாக ஒரு மூலக்கூறோ / காரணமோ இல்லாமல் வெற்றிடத்திலிருந்து உருவாக்குகின்றன!!!

கடல் குவார்க்குகள், நுண்ணளவில் பல அணுத்துகள்கள் சேர்ந்த கூட்டுத்துகளாக உருவாகி மிகவும் குறுகிய காலம், குவார்க் - குவார்க் பிம்ப இரட்டையாக இருந்து (1/ (10 பவர் 24 நொடிகள் )) பின்னர் கூட்டுத்துகளாக திரும்பவும் மாறி விடுகின்றன.

கடல் குவார்க்குகள், பல வகைகள் உள்ளன. அவை பெரும்பாலும் மேல் மற்றும் கீழ் (சைவம் / சாக்தம் ) குவார்க்குகள் மூலம் உருவாகின்றன.

சில சமயம் விசித்திர குவார்க்குகள் (குமரன்) மூலமும் உருவாகின்றன.

தகை  குவார்க்குகள் ( விஷ்ணு ), பெரும் பலத்துடன் உருவாகுமிடத்து, அதற்கு நேர் எதிரான திசையில் ஒரு துகள் நதியை உருவாக்குகின்றன. அதை பிரபஞ்ச ஊற்று என்றும் அழைப்பார்கள். 





சில விண் மீன் பேரடை (galaxy), இவ்வாறும் செயல்படுகிறது. அதனாலேயே விஷ்ணு  விண் மீன் பேரடை தலைவராக உருவகிக்க படுகிறார்.



பிரபஞ்ச ஊற்று அவரின் மாயா சக்தியாக  உருவகிக்க படுகிறது.

தாழ் குவார்க் (கணபதி) உருவாக்கும் பிரபஞ்ச ஊற்றுகள், தகை குவார்க்குகளின் (விஷ்ணு) மாயா ஊற்றுகளை விட எளிதாக பார்க்க கிடைக்கின்றன.

மற்ற குவார்க்குகளிலிருந்தும் கடல் குவார்க்குகள் (துர்கை) உருவாகின்றன. ஆனால் தன்மையால் அவை தகை (விஷ்ணு) குவார்க்குகள் உருவாக்கும் மாயா ஊற்றை போலிருப்பதால், அவற்றை தகை / விஷ்ணு உருவமாக பார்க்கும் வழக்கமும். மேல் / கீழ் (சிவ /சக்தி) உருவமாக பார்க்கும் முறையும் உள்ளது.

மொத்தத்தில் நவீன விஞ்ஞானம் காண்கின்ற / காணாத அணு / பிரபஞ்ச  விஞ்ஞானத்தையே வேத / ஹிந்து மார்க்கம் ஆன்மீக / தர்க்க / அறிவியல் / மத கோட்பாடாகவும் கொண்டிருக்கிறது.

இப்போது பரமாச்சாரியார் சொல்வதை பார்ப்போம்.

தெய்வத்தின் குரல்....

உண்மையில் நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த உண்மை தெரியும். 

எல்லா கலைகளும் சாஸ்திரங்களும், ஸயன்ஸுகளும், பாரத தேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். சாதாரண ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே காரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும்கூட இப்படித்தான் நமக்குப் புரியாத பரிபாஷையில் இருக்கும்.

இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக்கிவிடக்கூடாது. நமக்குப் பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், புரியாத சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.

இதில் ஒரு முக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள் யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கப்பட்டிருந்தன. 

வெறும் லௌகிக சௌக்கியத்துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தி மேல்நாடுகள் உண்டாக்கியிருக்கிற ‘நாகரிக’த்தில் ஆத்மசாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல் நாட்டுக்காரர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரிகத்தில் ஏறி, இப்போது அவர்கள் அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதில் ஆத்ம திருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய வேதாந்தத்தின் பக்கமும் நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாமோ நம்முடைய லௌகிக வித்தை, ஆத்ம வித்தை இரண்டையும் அலட்சியம் செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரிகத்தைத் தேடி ஓடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்திலிருந்து (iron Age) தங்க யுகத்துக்கு (Golden Age)—அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாச யுகத்துக்கு—வந்து கொண்டிருக்கிறார்கள். நாமோ பிரகாச யுகத்திலிருந்து இருட்டு யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

 -- பரமாச்சாரியார் 


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்









https://bharathavamsavali.blogspot.com/2021/06/6-darsanas-and-6-protovirtual-religions.html

Ganapathyam - Supreme Controller - Yoga (theistic)  - bottom quark

Kaumaram - Supreme Change - Vaisesika (naturalist) - strange quark ( bottom too)

Sauram - Supreme Creation - Samkya (orthodox) - top quark 

Vaishnavam - Supreme Bliss - Poorva Mimamsa (realist) - charm quark (top too)

Saktham - Supreme Energy - Nyaya (theistic) - down quark

Saivam - Supreme Existence - Uttara Mimamsa (abstract) - up quark


https://en.m.wikipedia.org/wiki/Quark

https://en.m.wikipedia.org/wiki/Baryon

https://en.m.wikipedia.org/wiki/Baryogenesis

https://en.m.wikipedia.org/wiki/Hadronization

https://cds.cern.ch/record/1183649/files/p239.pdf

https://news.fnal.gov/2014/12/measuring-the-strange-sea-with-silicon/

https://phys.org/news/2019-03-sea-quark-reveals-deeper-complexity.html

Sea quark. -  A gluon can split into a quark-antiquark pair that exists for a fleetingly short time (10-24 seconds or less) before reforming back into a gluon.


https://en.wikipedia.org/wiki/Dormammu

"ruler of an alternate dimension or dark dimension"

"Dormammu kills the elderly Strange, and almost overwhelms his other foes, but is defeated when Krugarr summons the spirit of Strange, and they channel the combined power of everyone in the assembly to banish Dormammu to his home dimension"

https://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post.html

Tuesday, October 5, 2021

வேத விஞ்ஞானம் - வேத விஞ்ஞானி பரமாச்சார்யர் நோக்கு/நோக்கம் - சில பார்வைகள்..

 


வேத விஞ்ஞானத்தை விஞ்ஞானமாக வெளிப்படுத்துவது பிராமணர்களாகிய நம் கடமையே.. நாமே அதை இந்தியர்கள் புலமையால் மட்டும் உருவாக்கியது என்று சொன்னால் நாம் வேதத்தை / ஸ்ரீருத்ரத்தை சரியாக பார்க்கவில்லை என்றுதான் பொருள். 

ஸ்ரீருத்ர தியானம் த்ருவபதத்தை அடைய இந்த பாராயணம் செய்கிறேன் என்கிறது. 

அது எங்கே உள்ளது? யார் இதை நமக்கு அளித்தது? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தேவர்கள் யார்?  அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஏன் இந்த உலகை தம் வழியில் செலுத்த முயல்கிறார்கள்? இந்த தேவேந்திர சங்கம் நிஜமா? 

இதை பற்றி பேசாமல் போனால் ஸ்ரீ ருத்ரத்தின் உண்மை புலப்படாது...

பரமாச்சாரியார் தர்க, விஞ்ஞான விளக்கம் கிள்ளி கொடுக்கவில்லை.. அள்ளி கொடுத்திருக்கிறார்!!!

தத்துவம் மட்டும் அல்ல. விஞ்ஞான விளக்கம் உள்ளது. கணிதம் மற்றும் ஆர்வம் மட்டுமே இதை அளிக்கவில்லை.. வெளிநாட்டுகார விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள் பலர் நம்மை விட அறிந்தவர்கள். பரமாச்சாரியார் பலரை காட்டியுள்ளார். எழுதியும் உள்ளார். ஆனால் அறிவியல் பார்வை இல்லாத நிலையில் நம்மவர்களோ / மேலை நாட்டாரோ எழுதியவை  கண்டிப்பாக விமர்சனம் செய்யப்படும்..

பரமாச்சாரியார் எழுதியவற்றை பார்ப்போம். இவை மிகவும் முக்கியமானவை, ஏனெனில் நமது பாரத தனித்துவ சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதுவே அளவுகோல்!!

தெய்வத்தின் குரல்....

மொத்தத்தில் சாஸ்திர அபிப்பிராயம், வேதம் அநாதி; அது அநாதியாக ஈச்வரனின் சுவாஸமாக இருக்கிறது என்பதுதான்.

ஈச்வரனின் சுவாஸம் இந்த மாதிரி சப்த ரூபத்தில் இருக்கிறது என்றால், இந்த சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா சிருஷ்டி பண்ணினார் என்றால், நாகரிக மூளைக்கு “இதெல்லாம் சுத்த நான்-ஸென்ஸ்” என்று தோன்றுகிறது.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், பெரிய விஞ்ஞான உண்மையே இதில் இருக்கிறதென்று தெரிகிறது.

இப்படிச் சொல்லும்போது இன்றைய விஞ்ஞானத்துக்கு acceptable- ஆக (ஏற்புடைத்தாக) இருந்தால்தான் மத விஷயங்களை நாம் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. நம் ஸயன்ஸும், ஸயண்டிஸ்டுகளும் எங்கே போக முடியாதோ அந்தப் பரமாத்ம தத்துவத்தைச் சொல்கிற வேதத்தை, ஸயன்ஸின் லிமிட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதிலுள்ள அநேக விஷயங்கள் ஸயன்ஸுக்கு ஒத்துவராமல்கூட இருப்பதாகத் தோன்றலாம். அதனால் அவை தப்பு என்று ஆகிவிடாது. ஆனால் இங்கே எடுத்துக் கொண்ட விஷயம் – மூச்சு எப்படி சப்தகோவைகளான மந்திரமாக இருக்க முடியும், அதை வைத்துக் கொண்டு எப்படி லோக ஸ்ருஷ்டி உண்டாக முடியும் என்ற விஷயம் – ஸயன்ஸுக்கும் ஒவ்வியதாகவே இருக்கிறது என்று மட்டும் சொன்னேன்.

நாம் எழுப்புகிற ஒலிகள் அழிகிறதேயில்லை! இரண்டாயிரம் வருஷத்துமுன் கிறிஸ்து பேசினதை, அவர் குரலிலேயே இப்போதும் பிடித்துத் தரமுடியும்; அதற்காக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று படித்ததாக ஞாபகம். அப்புறம் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு possibility [சாத்தியக்கூறு] இருக்கிறது என்று தெரிகிறது. ஒரு ஒலி உண்டானபின், என்றுமே அது அழியாமல் ஆகாசத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.

இம்மாதிரி, பிரளயத்திலும் அழியாமலிருந்த வேத சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா மறுபடி லோக சிருஷ்டி பண்ணியிருக்கிறார். கல், மண், மரம், இரும்பு முதலியவற்றை வைத்துக் கொண்டு, நாம் ஒரு ஊரை நிர்மாணம் பண்ணுகிறோம். ஆனால் இந்தக் கல், மண், மரம், இரும்பு எல்லாமே பரமாத்மாவின் எண்ணத்தில் இருந்து, எண்ணுகிற மனஸுக்கும் ச்வாஸத்திற்கும் மூலம் ஒன்றாயிருப்பதால், அவருடைய ச்வாஸ சலனத்தினால் ஏற்பட்டவைதான். அந்த சலனங்களுக்குரிய சப்த ரூபத்தை, பிரம்மா வேதங்களாகக் கண்டு அத்யயனம் பண்ணின மாத்திரத்தில் சிருஷ்டி முழுக்க வந்து விட்டது.

இப்போது அடிக்கடி பேப்பரில் [செய்தித்தாளில்] பார்க்கிறோம். பலவிதமான ‘ஸெளண்ட் வைப்ரேஷன்’களை [சப்த அதிர்வுகளை] செடிகளுக்கு அருகிலே உண்டு பண்ணினால், சில விதமான வைப்ரேஷனினால் செடி நன்றாக வளர்ந்து நிறையக் காய்க்கிறது. சிலவகை வைப்ரேஷனால் வளர்ச்சி குன்றுகிறது என்று நியூஸ் வருகிறது. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார சக்தி எல்லாம் சப்தத்துக்கு உண்டு என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறது.

பிரம்மாவின் தபோ மகிமையால், power of concentration-ஆல் லோகம் முழுவதையும் வேத சப்தத்தால் அவர் உண்டாக்க முடிந்தது. 

நாம் தினமும் ஜபிக்கிற அதே பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு தரம் சொல்லி ஒரு ஸித்தர் விபூதி பூசினால், உடனே ஒரு வியாதி சொஸ்தமாகிறது என்றால், அது எப்படி? நம்மைவிட அவருக்கு உள்ள கான்ஸென்ட்ரேஷன் [மன ஒருமைப்பாட்டு] சக்தியால்தான்.



அதனால் அனந்தமான வேதங்கள் உண்டு என்று தெரிகிறது. நாலுவேதம், ஆயிரத்து சொச்சம் சாகை என்பதெல்லாம் பிற்பாடு ஏற்பட்ட அமைப்புகள்தான்.

பிரம்மா உண்டானவுடன் அவருடைய ஹிருதயத்தில் வேத சப்தமெல்லாம் தோன்றின. அவருக்கு ஸ்ருஷ்டி செய்வதற்கு அந்த வேதம் வழி காட்டிற்று. எங்கே பார்த்தாலும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அவர் அறிந்தார். அவருக்கு எல்லா வேதங்களும் தோன்றும்.

ரிஷிகளுக்குச் சிலசில மந்திரங்களே தோன்றும். இப்படி ரிஷிகளுக்குத் தோன்றிய மந்திரங்கள்தான் நமக்கு கிடைத்துள்ள வேதமாக இருக்கிறது.

நாம் மந்திரங்களுக்கு ரிஷி, சந்தஸ், தேவதை என்னும் மூன்றையும் சொல்லுகிறோம். எல்லா மந்திரங்களுக்கும் ரிஷி, சந்தஸ், தேவதை உண்டு. தெலுங்கு தேசத்தில் எல்லா மந்திரங்களுக்கும் அவைகளைச் சொல்லிவருகிறார்கள். தபஸ் பண்ணின ரிஷிகள் மூலமாக அறியப்பட்டவையே மந்திரங்கள். அந்தந்த ரிஷிகள்தான் அந்தந்த மந்திரங்களுக்குரிய ரிஷிகள். அவர்களுக்கு அந்த மந்திரங்களைக் கேட்கும் திவ்விய சுரோத்திரம் உண்டு. யோகசாஸ்திரத்தில் பெரிய ஆகாசமும் மனஸிலுள்ள ஆகாசமும் ஒன்றாக ஆகிவிட்டால் பெரிய ஆகாசத்திலுள்ள சப்தமெல்லாம் நமக்குக் கேட்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எங்கும் நிறைந்து அபேதமான நிலையை அடைந்தவர்களுக்கே அந்த சப்தங்கள் தெரியும். இம்மாதிரி ரிஷிகள் மந்திரங்களை லோகத்தில் பிரசாரத்துக்குக் கொண்டு வந்தவர்களேயன்றி, அவற்றை இயற்றியவர்களல்ல. ஆனாலும், ஏற்கனவே உள்ளதை வெளிப்படுத்தியதாலேயே நமக்குப் பரம உபகாரத்தைப் புரிந்திருக்கிறார்கள். ஒருவர் நமக்கு கங்கா தீர்த்தம் கொண்டு வந்து கொடுத்தால், கொடுத்தவரையே நமஸ்காரம் பண்ணி வாங்கிக் கொள்கிறோம். அவரா கங்கையை உண்டு பண்ணினார்? இல்லாவிட்டாலும், ஆயிரம் மைலுக்கு அப்பாலிருக்கும் கங்கை நமக்குக் கிடைக்கும்படி அவர் செய்த உபகாரத்தைப் போற்றுகிறோம். நம் காதுக்கு எட்டாத மந்திரங்களை நமக்காகப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்த ரிஷிகளை எவ்வளவு பூஜித்தாலும் போதாது. அதனால்தான் ஒரு மந்திரத்தைச் சொல்லும்போது, எந்த ரிஷி மூலமாக அது லோகத்துக்கு வந்ததோ அவர் பெயரைச் சொல்லி தலையைத் தொடுகிறோம். அவருடைய பாதங்களை சிரஸில் வைத்துக் கொள்கிறோம் என்பதற்கு இது அறிகுறி.

வேதங்கள் ஆதியற்ற அநாதி. அவை மநுஷ்யர்களால் செய்யப்படாத அபௌருஷேய கிரந்தம் என்பதெல்லாம் எப்படி என்று நான் இவ்வளவு நாழி சொன்னதிலிருந்து கொஞ்சங் கொஞ்சம் தெளிவாகியிருக்கலாம்.

தேவர்கள் என்பவர்கள் பகவத் ஸ்ருஷ்டியில் உயர்ந்த சக்தி படைத்த ஒரு இனம்.

** லோக வாழ்க்கை நமக்கும் ஸகல ஜீவகுலத்துக்கும் அநுகூலமாக இருக்க வேண்டுமானால் பிரபஞ்ச சக்திகளைப் பரமாத்மாவின் உத்தரவின்படி நிர்வாகம் பண்ணி வரும் தேவதைகளின் அநுக்ரஹம் நமக்கு இருக்கவேண்டும் என்று சொல்லி, அவர்களின் அநுக்ரஹத்தைப் பெற்றுத் தரவே அவர்களுக்குப் பிரீதியாக யக்ஞங்களைப் பண்ணவேண்டும் என்று வேதம் சொல்கிறது * . ஞானம் வந்தபின் இந்த தேவர்கள் வேண்டாம். நேராகப் பரமாத்மாவை உபாஸிக்கலாம். ஆனால் த்வைதப் பிரபஞ்சத்திலிருந்து கொண்டே, இதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை நாம் செய்கிற காலத்தில், வேறு வேறாக தேவதைகளையும் உபாஸிக்கத்தான் வேண்டும் என்று வைத்திருக்கிறது. **

இப்படி வேதங்கள் பலவாக இருந்தாலும், அதில் ஒவ்வொன்றைச் சேர்ந்தவர்களிடையே ஆசாரங்களில் சில வித்தியாஸங்கள் இருந்தாலும், எல்லா வேதங்களும் ஒரே லக்ஷ்யத்தை உடையவைதான். ஸமஸ்த லோகத்திற்கும், ஸகல ஜீவ ஜந்துக்களுக்கும் க்ஷேமத்தைக் கோருவதும், அவனவன் ஆத்மாவை அபிவிருத்தி பண்ணிக்கொண்டு, ஸத்ய தத்வத்தோடு சாச்வதமாகச் சேர்ந்து விடுவதும்தான் எல்லா வேதங்களுக்கும் பொதுவான லக்ஷ்யம்.

வேதங்களில் பொதுவான இன்னொரு பெருமை, ‘இது ஒன்றுதான் வழி’, ‘இது ஒன்றுதான் தெய்வம்’ என்று அது சொல்லாமல், சிரத்தையோடு எந்த மார்க்கத்தை அனுஸரித்து, எந்தத் தேவதையை எப்படி உபாஸித்தாலும், அதுவே சத்தியமான ஒரு வழியில் கொண்டு விட்டுவிடும் என்பதுதான். வேதம் தவிர இந்த மாதிரிப் பல வழிகளை ஆதரித்துப் பேசுகிற மதப் பிரமாண நூல் வேறெதுவுமே லோகத்தில் இருக்கவில்லை. தன் வழி ஒன்றே மோக்ஷ மார்க்கம் என்றுதான் அந்தந்த மதத்தின் மூலநூலும் சொல்லும். ஒரே ஸத்தியத்தைப் பல பேர் பல தினுசாகக் கண்டு கொள்ளலாம் என்று விசால மனப்பான்மையோடு சொல்வது வேதம் மட்டும்தான்.

உண்மையில் நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த உண்மை தெரியும். ஆயுர்வேதத்தை—சரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால், இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளும், ஸர்ஜரி விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். மிகவும் புராதனமான அதர்வண வேதத்திலேயே யுத்தத்தில் உண்டாகும் பல விதமான காயங்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், சிகிச்சை முறை முதலியவற்றைப் பற்றிச் சொல்லியிருப்பது இப்போது ரொம்பவும் உபயோகமாக இருப்பதாகச் சமீபத்தில் காசி சர்வகலாசாலையில் ஒருத்தர் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார். என்ஜினீயரிங் டெக்னாலஜியிலும் ஆதியிலேயே அபாரமான திறமையை நம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான மிஷின்களைச் செய்வதற்கான அடிப்படைத் தத்வங்களை விவரித்திருக்கிறது. சுமார் இரண்டாயிரம் வருஷங்களான ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமல் இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே இப்பட்டிப்பட்ட பெரிய தூணை எந்த உலையில் (FURNACE) அடித்து உருவாக்கினார்கள் என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படிப் பல என்ஜினீயரிங் அற்புதங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளான கல்லணை எந்தவிதமான கலவையால் கட்டப்பட்டது என்று இன்றும் புரியவில்லை. ஆவுடையார் கோவில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதத்தின் அளவுக்கு மெல்லியதாக இழைத்திருக்கிறார்கள். திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபத்தின் பிரம்மாண்டமான வளைவை (ARCH) எந்த ஆதாரத்தில் கட்டியிருக்கிறார்கள் என்று என்ஜினீயரிங் நிபுணர்களும் வியக்கிறார்கள்.

தமிழில் பதினெண் சித்தர்கள் பாடலில் இருக்கிற வைத்திய நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்தியத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரகணம் என்று கொஞ்சம்கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது.

எல்லா கலைகளும் சாஸ்திரங்களும், ஸயன்ஸுகளும், பாரத தேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். சாதாரண ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே காரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும்கூட இப்படித்தான் நமக்குப் புரியாத பரிபாஷையில் இருக்கும்.

இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக்கிவிடக்கூடாது. நமக்குப் பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், புரியாத சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.

மற்ற தேசங்களில் சமீப காலமாகவே இந்த விஞ்ஞான வித்தைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. நாம் ஆதியில் நமக்கென்றே இருந்த இந்த வித்யா சம்பத்தை மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது கற்றுக் கொள்கிறோம்! இதில் ஒரு முக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள் யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெறும் லௌகிக சௌக்கியத்துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தி மேல்நாடுகள் உண்டாக்கியிருக்கிற ‘நாகரிக’த்தில் ஆத்மசாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல் நாட்டுக்காரர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரிகத்தில் ஏறி, இப்போது அவர்கள் அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதில் ஆத்ம திருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய வேதாந்தத்தின் பக்கமும் நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். நாமோ நம்முடைய லௌகிக வித்தை, ஆத்ம வித்தை இரண்டையும் அலட்சியம் செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரிகத்தைத் தேடி ஓடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்திலிருந்து (iron Age) தங்க யுகத்துக்கு (Golden Age)—அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாச யுகத்துக்கு—வந்து கொண்டிருக்கிறார்கள். நாமோ பிரகாச யுகத்திலிருந்து இருட்டு யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

                                                                                                               ---- பரமாச்சாரியார் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


திரும்பும் வழி...

ஸ்ரீ ருத்திரம், 
தேவ உலகுடன் உயிர்களை/ கோளத்தை இணைக்கும் வழியை காட்டுகிறது. 

"ஜோதி ஸ்படிக லிங்கமாக சிவன் வருவான். "

"ஜோதி ஸ்படிக லிங்கத்தின் காந்த ஓளியை அமிர்த மயமாக, ருத்ர ரூபமாக தரிசித்து ஜபித்து, அதை தியானிக்கும் நான் ஒளி வழியை அடைந்து,  
துருவ பதம் அடைந்து, சிவஸ்வரூபமாக மாறுவேன்"

"வடகிழக்கு / ஈசான திக்கிலிருந்து எல்லா அறிவும் பெறப்பட்டன.
கணபதியும் ப்ரஹ்மாவும் சிவஸ்வரூபமாக அங்குள்ளனர்"

ஐந்து முகங்கள் 

சத்யோ ஜாதம் - அனாதி தூய காரண நிலை - வெண்மை
  
வாம தேவம் - கால சக்தி தமோ நிலை - கருநீலம் ( ஆகமத்தில் காவி சிவப்பு )

அகோரம் - விஸ்வரூப நிலை - காவி சிவப்பு ( ஆகமத்தில் கருநீலம் )

தத்  புருஷம் - தேவர் தலை நிலை - பசும்தங்கம் 

ஈசானம் - ஈச நிலை - வெண்மை, சாம்பல், கருநீலம் (சஹஸ்ரார தல பத்மம் )



ஸ்ரீ ருத்திரம், மந்திரங்களை  இணைக்கும் போது 

சத்யோ ஜாதம் - 1.1 - 2.1.7

வாம தேவம் - 2.1.8 - 3.2.4

அகோரம் - 3.2.5 - 4.2.9

தத்  புருஷம் - 5.1.1 - 6.1.10

ஈசானம் - 6.2.1 - 11.11

சத்யோ ஜாதம் - ஆனந்தமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

வாம தேவம் - விஞ்ஞானமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

அகோரம் - அன்னமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

தத்  புருஷம் - பிராணமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

ஈசானம் - மனோமய கோசம் / சூக்ஷ்ம உடல் 

தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம் 

https://dheivathinkural.wordpress.com/2014/07/11/%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%87%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

https://dheivathinkural.wordpress.com/2014/07/11/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

https://dheivathinkural.wordpress.com/2014/07/01/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

https://dheivathinkural.wordpress.com/2014/07/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

https://dheivathinkural.wordpress.com/2014/07/01/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/

https://www.youtube.com/watch?v=NFxJeu7x9Uk

https://youtu.be/hgTti6-iZ0c

https://www.youtube.com/watch?v=Fsc6wT5Eau4

http://bharathavamsavali.blogspot.com/2021/06/why-north-star-vega-is-important.html

http://bharathavamsavali.blogspot.com/2021/06/chamakam-numbers-with-dna-mathematical.html?m=1

According to Dr Sasidharan, these numbers represent a polymer chain of molecules that form apa or water that enables evolution of life and intelligence, and apa is nothing but the nitrogenous base pairs of the DNA.   The numbers 1 to 33 represent the 33000 base pairs of mitochondrial base pairs of DNA.  The numbers 4 to 48 represent the 48 million nuclear bases of DNA.  The two sets of DNA bases combine to provide sustenance of human wellbeing and onward evolution of human life.  When the devotee prays for the blessing of these numbers, actually he is praying for bestowing on him all these DNA bases which conduce to sustenance of human wellbeing and happiness!