Wednesday, September 29, 2021

பூதநாத கீதை - கேரள வர்மா / பாண்டிய வம்ச திலகம் / வீர மணிகண்ட ஸ்வாமி

பூதநாத உபாக்யானம் / பூதநாத உபக்யானம் / பூதநாத கீதை என்பது, பொன்னம்பலம் என்னும் பொன்னம்பல மேட்டில் / மலையில் பிறந்து, பந்தளத்தில் வளர்ந்து, பாண்டிய இளவரசனாக பட்டமேற்று, பின்னர் தன் ஜனன / பிறப்பு ரகசியத்தை அறிந்து, அரும்செயல்கள் பல செய்து, தவ கோலம் பூண்டு, பொன்னம்பல மேட்டில் சித்தி அடைந்த கேரள வர்மா / பாண்டிய வம்ச திலகம் / வீர மணிகண்ட ஸ்வாமி உரைத்த உண்மையும், மெய்பொருளும், வழியுமாம். 

பெரும்பான்மையான மனிதர்கள் பிறந்த இடத்திலிருந்து, உடம்பால், மனத்தால், ஆத்ம ரூபத்தால் நகர்வதில்லை/மாறுவதில்லை. ஆயின் மாற்றமும், நகர்வுமே இப்பூமண்டலத்தின் இயற்கை விதி. 

நம் போலவே பிறந்து, நம் வாழ்க்கை போல் வாழாமல், குருவாய், கடவுளாய் மாறிய இளவரசர்கள் புராண காலத்தில் பலர் இருந்தனர்,

துருவனிலிருந்து இந்த வழி தொடங்குகிறது. ப்ரஹலாதனையும், ராமனையும், கிருஷ்ணனையும் இன்னும் பலரையும் இப்பாதையில் காண்கிறோம்.

ஆனால் கடந்த 2000 ஆண்டுகளில், திராவிட தேசத்தில் பிறந்து, மேல்கண்ட பாதையில் பயணித்து, ஒவ்வொரு கேள்விக்கும் ஆச்சர்யம் ஊட்டும் பதில் அளித்து, ஆச்சார்யனாகவே அமர்ந்தவர் மணிகண்ட ஸ்வாமி.


பல தீர்க்க தரிசிகளை போல் அவருடைய பிறப்பும், தெளிவாக விளக்கப்படாதது. பொதுவான கருத்து, பாண்டியர்கள் மதுரையில் உரிமை இழந்த பின்னர் (சோழ வெற்றிகளால்) பல குழுக்களாக சிதறினர் (கி.பி 1048 -1084).

 ஒரு குழு, பத்ம தளம் / பந்தளம் சென்று ஆட்சி புரிந்தது. ராஜசேகர பாண்டியன் கி.பி 1081 இல், பந்தளத்தை ஆண்டு வந்தபோது அவனுக்கு தனது வாரிசு உரிமை பற்றி குழப்பம் இருந்தது. 

அகஸ்திய பீடத்தை சேர்ந்த குலகுரு ராஜசேகரனுக்கு அவன் பிறப்பு ரகசியத்தை அறிவித்து, முன்பிறப்பில் மதுரையில் அந்தண குலத்தில் பிறந்த அவன், சபரி மலையில் கும்பல தீர்த்தத்தில் நீராடி சாஸ்தாவின் அருளால் புத்திர பேறு பெற்றான். 

"மன்பதை காக்கும் தென்புலக்காவல்" என சிலப்பதிகாரம் இயம்பும் பாண்டிய வம்சத்தில் ராஜசேகரனாக (ராஜ ராஜ சோழன் தன்னை சிவபாத சேகரனாக அறிவித்து கொண்டான்) பிறந்து, அந்தணர் குலத்தில் பிறக்கும் தான் அவனுக்கு (முன்பிறப்பில் அந்தணன் விஜயன்) மகனாக வந்து சில காலம் வாழ்வதாக வாக்களித்தார்.

ராஜசேகரனுடைய பெண்ணை (தங்கை என்றும் சிலர் சொல்வர்), இஞ்சிப்பாறையில் இருந்து, கொள்ளையனாக வாழ்ந்த உதயணன் கவர்ந்து சென்றான். சபரி மலையில் அவன் நினைத்த காரியம் நிறைவேறாத கோபத்தில், பூசகரை கொன்று, கோவிலை உடைத்து, பூசகர் மகன் ஜெயந்தனையும் சிறை வைத்தான்.

ஜெயந்தனும் இளவரசியும் சாஸ்தாவின் அருளால் அங்கிருந்து தப்பினர்.

பொன்னம்பல மேட்டில் முனிவர்களின் ஆசிரமத்தில் மறைந்து வாழ்ந்தனர். முனிவர் குழாம், எதிர்காலத்தை அறிந்து, தேவர் குழாத்தின் துணையுடன், ஜெயந்தனுக்கும் இளவரசிக்கும் திருமணம் முடித்தனர்.

பங்குனி மாதம் பௌர்ணமியில் உத்திர நக்ஷத்திரம் துலா லக்கினம் புதன் கிழமையில் (கி.பி 1086) அவர்களுக்கு பொன்னம்பல மேடு ஆசிரமத்தில் கேரள வர்மன் என பின்னர் பெயர் பெற்ற மகன் பிறந்தார்.

தர்ம சாஸ்தாவின் அருளால் திராவிட தேசங்களை காக்க பிறந்ததால், முனிவர்கள் சாஸ்தாவின் கோவிலில் சார்த்தப்பட்ட மணியை அவர் கழுத்தில் கட்டினர்.

அதனால் மணிகண்டன் எனவும் பின்னர் அறியப்பட்டார்.

மணிகண்ட மாமுனியின் ஜாதகம் அவரது பிறவி நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் உள்ளது.

ஐந்தில் குரு புதன் சேர்க்கையும், பத்தில் கேது, பன்னிரெண்டில் சந்திரன் ( ஏழில் சுக்ரன் செவ்வாயும், ஒன்பதில் சனியும்) சன்னியாச யோகத்தையும், தபஸையும், ஞான காரகனான கேது, அவரை உலக வாழ்க்கை பயணத்தை தத்வத்தில் தொடங்கி தத்வமஸியில் முடிக்குமாறு நிறுத்தினார்.

ஜெயந்தனும் இளவரசியும் உதயணனால் பின்னர் கொல்லப்பட்டார்கள் என்றும் கூறுவதுண்டு. மறைந்து வாழ்ந்தார்கள் என்று கூறுவோரும் உண்டு.

எப்படியாயினும், குளத்துப்புழையில் ராஜசேகரன் குலகுருவின் ஆணைப்படி (அகஸ்திய பீடம்) மணிகண்டனை சுவீகாரம் எடுத்து கொண்டான். தன் பூர்வ ஜென்ம நல்வினை பயனால் இது விளைந்தது என்றறிந்து பந்தளத்தில் கேரள வர்மன் என்று பெயர் வைத்து இளவரசு பட்டம் கட்டி திராவிட தேசங்களை காப்பாற்றினான்!!

மணிகண்டனின் ஜென்ம நோக்கம் அறியாத பந்தள குடும்பத்தினரும், மந்திரிகளும் அவனுக்கு சதியால் கேடு வர திட்டம் தீட்டி முயற்சித்தனர்.

தர்ம சாஸ்தாவின் அருள் பெற்ற மணிகண்டன், சோதனைகளை சாதனை ஆக்கினார். புலிப்பால் கொணர்ந்தார். சகல உயிர்களும் தன் ஆளுகைக்குட்பட்டது என்று காட்டினார்.

பூதநாதனே தன் உருவத்தில் இருக்கிறார் என்று நிறுவினார்.

பாண்டிய குலங்களை ஒன்று சேர்த்தார். உதயணன் முதலிய மூர்க்கர்களை கொன்றார். வாவர் போன்றோரை நல்வழிப்படுத்தினார்.

மக்களை போர் பயிற்சியினாலும், யோக நிலை கூடுதல், த்யானத்தாலும், மந்திர தந்திர பயிற்சியாலும் நல்வழிப்படுத்தி, வரும்காலத்தில் தன் வாழ்விற்கு பின்னரும், இந்த பாரத தேசத்திற்கு கேடு வரும்போது, கற்பனைக்கு எட்டாத பலத்துடன், மந்திர தந்திர சித்தி உடன் வந்து காப்பாற்றுவேன் என்று அறிவித்தார்.

பூதநாத கீதை என்னும் பூதநாத உபக்யானம் அல்லது பூதநாதன் வழி...

ராஜசேகரனுக்கு பூதநாதனாக நின்று மணிகண்ட மாமுனி அறிவித்த தன் ஜென்ம நோக்கம், தத்வ உபதேசம், சபரி மலை கோயில் ரகசியம், யந்திர ரூபமாக, 18 படிகளாக, ஆயுதம் ஏந்தியவனாக (சாஸ்தாவாக), தத்துவம் கடந்த யோக ரூபமாக  தன்னை குருவாக கொள்ள / அமைந்த காரணம் / வழி, பூதநாத கீதை என்னும் பூதநாத உபக்யானம் என்று வழங்க படுகிறது.

மணிகண்ட மாமுனி தீயோரை அழிக்க, நம்மை நல்வழிப்படுத்த திரும்பவும் வருவார் என்ற நம்பிக்கையே இன்று திராவிட தேசங்களின் ஒரே வஜ்ராயுதம். 

 தேவரும் முனிவரும் அந்த நாள் திரும்பவும் ஏற்பட (பிரணவம் பவிக்க / ச்ராவணம் பவிக்க / சரவண பவ ) தவம் செய்வர்..

தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம் 



https://en.wikipedia.org/wiki/Sanyasa_yoga

Tapasavi i.e. the one who has conquered his senses and who possesses the finest of intelligence, is persevering, hardworking and successful. This is a yoga of a very high order and gives excellent results provided both Jupiter and the Moon gain favourable vargas and nakshatras.[11] The significant factor in this yoga-formation is the lord of the sign of exaltation for Devaguru (Jupiter) occupying the all-important Karmasthana (house of action).

https://ullagaramvijayaganapathy.files.wordpress.com/2015/09/hh3.pdf

https://www.facebook.com/BharathaVamsavali/photos/a.2102865383065040/2102866546398257/

Friday, September 17, 2021

ஹிந்து / அத்வைத சைவம் எங்கெல்லாம் இருந்தது?

 



தெய்வத்தின் குரலிலிருந்து..........

சுந்தரேசர் அல்லது சொக்கநாதர் பற்றி.......

"Exclusive- ஆக அத்வைதத்துக்கு மட்டுமே கிரந்தங்கள் உபகரித்தவர்களில் ஆசார்யர்களுக்குப் பூர்வத்தில் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள்.   

                                                                    ஸுந்தர பாண்டியர்கள் என்று ஒருத்தர் (ஏதோ தெற்கத்தி ராஜா பேர் மாதிரி இருக்கிறது!);  

                                                         இன்னொருத்தர் த்ராவிடாசார்யார். இந்த த்ரவிடாசாரியரை விசிஷ்டாத்வைதிகளும் தங்கள் ஸித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று சொல்லிக் கொள்வதுண்டு.

இவர்களுடைய கிரந்தம் எதுவும் இப்போது பூர்ணமாக நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஸாக்ஷாத் நம் சங்கர பகவத்பாதாள் உள்படப் பிற்கால அத்வைத கிரந்த கர்த்தாக்கள் இவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்."

"ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில் — குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்கு—இப்போது தாய்லாந்து என்கிறார்கள்—சென்றிருக்கின்றன."


"சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரிக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான் ‘இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து ‘ஒரிஜினல்’ மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்."



அருணகிரிநாதர்...

"திரிந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோனே

சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே "


ஆஸ்திரேலிய மெல்போர்ன் கலை அருங்காட்சியகத்திலிருந்து...

குடை, தோலால் ஆசனம், ருத்திராட்சம் போன்ற ஜப மாலை.. ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் குருமார் பொருட்கள்..

ஜப மாலையில் சரியாக 60 மணிகள் உள்ளன..

ஒவ்வொரு நொடியும் பிரணவத்தையோ, சிவ பஞ்சாக்ஷரத்தையோ ஜபம் செய்தவர்கள் ரஷ்யாவிலிருந்து, ஆஸ்திரேலியா வரை இருந்திருக்கிறார்கள்.




திராவிட மொழிகள் (மத்திய கிழக்கிலிருந்து ஆஸ்திரேலியா வரை) சைவ வழிமுறைகளை கொண்டுள்ளன ( வெள்ளை ஆடை , ருத்திராக்ஷ ஜெப மாலை, சாம்பல் /திருநீறு அணிதல் )

நாம் கைலாசத்திற்கும், காசிக்கும், சபரி மலைக்கும் செல்வதுபோல் ஆஸ்திரேலிய பழங்குடியினர் உள்ளுரு (உள்ளூர் ) எனும் மலைக்கு 40 ஆயிரம் ஆண்டுகளாக செல்கிறார்கள்.



மத்திய கிழக்கில், ரஷ்யாவில்  அக்னி உருவாக வழிபட்டனர். 

ரிக் வேதம் ரஷ்யாவில் இருந்தது. கார்க்கி என்ற  ரஷ்ய பெயர், இந்தியாவில் கோத்ர பெயராக உள்ளது. இது போன்ற அநேக ஒற்றுமைகள் உள்ளன.

சிவப்பு இந்தியர்கள் வட அமெரிக்காவில், லிங்கமாக, சாஸ்தாவாக (ஆயுதம் ஏந்தியவராக) வழிபட்டனர்.

பசிபிக் தீவுகளில் வாழ்வோர் நம்மைப்போல் எரிமலைகளை கடவுளாக வழிபடுகின்றனர். இதையே வட அமேரிக்காவில் செவ்விந்தியர்கள் செய்கின்றனர்.

செவ்விந்தியர்கள் திசைகளையும் ஆகாயத்தையும் வழிபட்ட முறை, பஞ்சாயதன முறையை போல் ஒட்டியுள்ளது. ஸ்ரீ ருத்திரத்தில் சொல்லப்படும் நிறங்களையே (வெள்ளை, கருநீலம், நீலம், சிவப்பு, பசுந்தங்கம்/மஞ்சள் ) அவர்கள் திசைகளுக்கு குறிக்கிறார்கள்.

ஆதலால் வோல்காவிலிருந்து கங்கை வரை (ராகுல் சங்கரித்தியாயன் கங்கையோடு, ஏனோ, நிறுத்தி விட்டார்!!! ) மட்டும் அல்ல, அறிவுடன் ஆய்ந்தால், மெல்போர்னில் ஓடும் யர்ரா நதி வரை (யர்ரா என்பது ஆறு என்பதின் திரிபு), வட அமெரிக்காவிலிருந்து, பசிபிக் தீவுகள்வரை  அத்வைத சைவம் பரவிக் கிடந்தது.










மகேந்திர வர்ம பல்லவனும், மாமல்லனும், ராஜ ராஜனும் (சிவபாத சேகரன் / ராஜ ராஜன் ), ராஜேந்திரனும் அத்வைத சித்தாந்த சைவத்தை உலகம் யாவும் திரும்ப கொண்டு வர செய்தார்கள்.


ஆதி மதமான, அக்னி, சக்தி/தாய், சிவ/ஜீவ ஒளி /ஆதி தந்தை, சாஸ்தா (ஆயுதம் ஏந்தியவராக)  இவற்றை உள்ளடக்கிய ஹிந்து மதமே, மனிதனின் மிகப்பழைய ஆன்மிக / மத வழக்கங்களையும், போதனைகளையும், தத்துவத்தையும் கொண்டது. 40000 முதல் 2 லக்ஷம் ஆண்டுகள் பழமையான வழக்கங்கள் நாம் கடைபிடிக்கிறோம். எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்கள் கண்டபோதும் பழைய வாழ்க்கையை மறைக்கவோ, மறுக்கவோ முயலவில்லை. ஜீவ ஆழ்நிலையை நன்குணர்ந்தே இது இப்படி போதிக்கிறது. மற்ற மதங்கள் பழைய முறைகளை முழுவதும் அழித்தன.

சனாதனம் என்ற வார்த்தை இதையே குறிக்கிறது. அதை இன்று வர்க பேதத்தை காப்பாற்ற உபயோகிப்பதாக பொய்யுரைக்கின்றனர். வர்க, ஜாதி, இன, மொழி பேதங்கள் பின் வந்தன. எல்லா கண்டங்களிலும் இவை இருந்தன, இருக்கிறது. நாளைய உலகம் இதை கடந்து தூய பழைய மதமான வேத மதத்தின் உண்மை பொருளுணர்ந்தால் மட்டுமே பிரிவினைகளால் வரும் அழிவை தடுக்க இயலும். சனாதன வேத மதம் பிறப்பு அடிப்படையில் மட்டுமே எல்லாம் என்று சொல்லவில்லை. ஆனால், பிறப்பிலிருந்து நீ கற்றுக்கொள். மன மாற்றத்தால், வாழ்க்கை முறை மாற்றத்தால் மட்டுமே பிறவி பயனை அடைய முடியும். இது எல்லாருக்கும் பொதுவானது.

மேற்கூறியது பொய் என்றால், பிறப்பால்  ப்ராஹ்மணர் அல்லாத 6 ரிஷிகள் (அத்ரியை தவிர) அந்நிலை எப்படி அடைந்தனர். அம்பரீஷர், விஸ்வாமித்திரர், சத்யகாம ஜாபாலி, நந்தனார் உட்பட பலர் பொய்யா ?

குணத்தாலும், கர்மத்தாலும் யாவரும் மனநிலை, உயிர்நிலை மாற்றமடைய வேண்டும்/முடியும் என்பதே கீதையின் முடிவு.

வேதத்தின் முடிவும், வேதாந்தத்தின் முடிவும் அதுவே.


சிவோஹம். ஹரி ஓம்.


https://dheivathinkural.wordpress.com/2014/07/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88/

https://dheivathinkural.wordpress.com/2014/06/16/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

https://jayasreesaranathan.blogspot.com/2016/02/indian-connection-to-australian.html

http://www.thiruppugazh.org/?p=1805

https://thewildwest.org/lakotaindiansthefourdirections/

https://thewildwest.org/lakotaindiansthecircle/

https://thewildwest.org/lakotaindiansconceptofwakan/

https://americanindian.si.edu/

https://www.atlasobscura.com/articles/mount-shasta-spirituality

https://www.wayoutback.com.au/blog/ulurus-significance-to-australian-indigenous-culture/

https://en.wikipedia.org/wiki/Walkabout

https://en.wikipedia.org/wiki/Volga_Se_Ganga

Friday, September 10, 2021

மஹாகவி சுப்ரமணிய பாரதி - Mahakavi Subramanya Bharathi




“Nation Bharath is a grand old country, you are its progeny, Forget not”

-       Mahakavi Subramanya Bharathi

 


பாரதி சுயசரிதை
------------------------
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.
34
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்.
35
கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=151


ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
         கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
         வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
         கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
         மேவு பராசக்தியே.          1

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
         எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
         சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
         முற்று முணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
          தாழ்வுற்று நிற்போமோ?          2


கண்ணன்- என் தந்தை

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7

நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8

வயது முதிர்ந்து விடினும் - எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9

துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;
அன்பினைக் கைக் கொள் என்பான்; - துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10


கண்ணன்- எனது சற்குரு


சந்திரன் சோதி யுடையதாம் - அது
        சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
        சேர்ந்து தழுவி அருள்செயும்; - அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
        மாயக் களிப்பெருங் கூத்துக் காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
        சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7

"ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; - கடல்
        ஆருங் குமிழி உயிர்களாம், - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
        சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
        மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்; - வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
        நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8


"சித்தத்தி லேசிவம் நாடுவார்; - இங்கு
        சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
        வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
        நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநத்தம் - எனச்
        சூழ்ந்து கவலைகள் தள்ளியே. 9


"சோதி அறிவில் விளங்கவும் - உயர்
        சூழ்ச்சி மதியில் விளங்கவும் -அற
நீதி முறைவழு வாமலே - எந்த
        நேரமும் பூமித் தொழில் செய்து -கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
        உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே -இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
        மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 10


ஆடுதல், பாடுதல். சித்திரம் - கவி
        யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
        ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
        நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
        காவனம் என்றதைப் போற்றலாம். 11


"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
        ஞானம் விரைவினில் எய்துவாய்" - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
        செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
        ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
        ஆட லுலகென நான் கண்டேன்! 12


கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் - புன்னாகவராளி


பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று (நின்னை)

3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னை)

4. துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)




இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே - நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே - முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் - பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா      

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா  

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
        மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
        சாட்சியை - மாயையே.         6

என்னிச்சை கொண்டுனௌ யெற்றிவிட
        வல்லேன் மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
        வராது காண்- மாயையே.         7

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
        தேர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன்
        உன்னை - மாயையே. 


 அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7

உள்ள தனைத்திலும் முள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8

மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே. 10

நந்தலாலா


காக்கச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா;                        1

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா;                        2


கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;                        3

தீக்குள் விரலவத்தால்
நந்தலாலா -- நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.        


சூர்ய ஸ்தோமம் -- ஞானபாநு

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு. 1

கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள். 2

அனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3

பண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்கும் ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின். 4

தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
          ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
          புத்தி மயக்க முண்டோ?           1

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
          உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
          வேதனை யுண்டோடா?           2

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
          செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
           எண்ணஞ் சிறிது முண்டோ?           3


பகைவனுக் கருள்வாய்

பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்.

புகைநடுவினில் தீயிருப்பதைப்
      பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
      பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
      பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
      பரமன் வாழ்கின்றான்.                                                          (பகைவனுக்)               1

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
      செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
      கொடி வளராதோ? - நன்னெஞ்சே                                   (பகைவனுக்)               2

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
      உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
      சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே                        (பகைவனுக்)               3

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
      வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்
      சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே                             (பகைவனுக்)               4

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
      போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தோிற் கசைகொண்டு
      நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே               (பகைவனுக்)               5

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
      சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
      அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே                        (பகைவனுக்)               6







http://www.keetru.com/rebel/bharathi/index.php

http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=151

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=16