Saturday, July 23, 2022

ஆதி மதமா, ஹிந்து மதமா? மூல புருஷர் யார்? ஸ்தாபகர் யார்? வேர் எது? வேத விஞ்ஞானம் சாத்தியமா ? மற்ற மதங்களை எங்கு வைப்பது ? வர்ணம் / ஜாதி / வர்ண மாற்றம் உண்டா ?

 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

மஹாஸ்வாமி அவர்களின் அமுத மொழியிலிருந்து....

ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும்.

நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை

இதைப் பற்றி நினைத்தபோது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது.

அந்த ஆதி காலத்தில் இதை ஸ்தாபித்தவர் யார் என்ற கேள்வி வரும். பெயர் இல்லாத நம் மதத்தை யார் ஸ்தாபித்தார் என்று பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தாலும், அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பிரம்ம சூத்திரம் செய்த வியாசரைச் சொல்லலாமா, கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்லலாமா என்றால்,

அவர்களும் தங்களுக்கு முன்னரே இருக்கிற வேதங்களைப் பற்றிச்சொல்கிறார்கள். சரி, இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ ‘நாங்கள் இந்த வேதங்களைச் செய்யவில்லை’ என்கிறார்கள். ‘பின்னே உங்கள் பேரில் தானே மந்திரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன? ஒவ்வொரு மந்திரத்தையும் உபாசிக்கிறபோது அவற்றுக்கு உங்களில் ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லித்தானே தலையைத் தொட்டுக் கொள்கிறோம்?’ என்று கேட்டால், அந்த ரிஷிகள், எங்கள் மூலம்தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால்தான் எங்களை மந்திர ரிஷிகளாகச் சொல்ல்யிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததே ஒழிய, நாங்களே அவற்றைச் செய்யவில்லை (Compose பண்ணவில்லை). நாங்கள் அப்படியே மனம் அடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற…

சகல சப்தங்களும் ஆகாசத்திலேயே பிறக்கின்றன. அவற்றிலிருந்தே த்ருஷ்டி உண்டாயிற்று. இதைத்தான் Space-ல் ஏற்பட்ட vibration-களால் பிரபஞ்சம் உண்டானதாக ஸயன்ஸில் சொல்கிறார்கள். ரிஷிகள் தங்களது தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களைக் கடைத்தேற்றுகிற சப்தங்களை ஆகாசத்தில் மந்திரங்களாகக் கண்டார்கள். ஆனால் அவர்கள் செய்ததல்ல இம்மந்திரங்கள். புருஷர் எவரும் செய்யாத அபௌருஷேயமாக  இந்த வேதங்கள் ஆகாச ரூபமான பரமாத்மாவிலேயே அவரது மூச்சுக் காற்றாக இருந்தவை. அவற்றையே ரிஷிச்ரேஷ்டர்கள் கண்டு உலகுக்குத் தந்தார்கள்.


இப்படித் தெரிந்து கொண்டால் நம் மதத்தில் ஸ்தாபகர் யார் என்று தெரியவில்லையே என்பதும் ஒரு குறையாக இல்லாமல் அதுவே பெருமைப்படுகிற விஷயமாக இருக்கும். பரமாத்மாவின் சுவாசமாகவே இருக்கப்பட்ட வேதங்களை அனுஷ்டிக்கிற அநாதி மதத்தின் வாரிசுகளாக வந்திருக்கும் மகா பாக்கியம் நமக்குக் கிட்டியிருக்கிறது என்று பூரிப்பு அடைவோம்.


சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரிக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே!

அதனால்தான் ‘இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து ‘ஒரிஜினல்’ மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்.

(Note - Jewish scriptures have common sootras with Rg veda as per Mahaswami)

சித்தாந்த சைவர்கள் சிவபெருமான் அவதரித்ததாக ஒப்புக் கொள்வதில்லை. ஆதி சங்கர பகவத்பாதாள் ஈசுவராவதாரம், ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்றெல்லாம் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கர்ப்பவாசம் செய்வது, மாம்ஸ மயமான நரதேகத்தில் இருப்பது எல்லாம் ஸ்வாமிக்கு இழுக்கு என்பது அவர்களுடைய அபிப்பிராயம். 

அத்வைதிகளுக்கோ கர்ப்பவாஸம் செய்த மாம்ஸ சரரீரத்தில் இருக்கிற இத்தனை பேருமே ஸாரத்தில் பிரம்மம்தான். ஆகையால், ஈசுவராவதாரத்தில் அவர்களுக்கு நிஷித்தமாக எதுவும் தெரியவில்லை.

 ஸித்தாந்த ரீதியில் வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் பல ஒற்றுமையிருந்த போதிலும், பிரம்மமேதான் ஜீவனாயிருக்கிறது என்ற அத்வைதத்தை வைஷ்ணவர்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாத போதிலும், வைஷ்ணவர்கள் யாவரும் அவதார கொள்கையை ஒப்புக் கொள்கிறார்கள். பொதுவாக லோக வழக்கிலும் அவதாரம் என்றாலே மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள்தான் நினைக்கப்படுகின்றன. 

வைஷ்ணவர்கள் அவதாரங்களை ஒப்புக் கொள்வதற்குக் காரணம், பகவான் பரம காருண்யன் ஆனபடியால் ஜனங்கள் உஜ்ஜீவிக்கச் செய்வதற்காகத் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் குறைவுபடுத்திக் கொள்வான் என்று அவர்கள் நம்புவதுதான்.


உள்ளுக்குள்ளே தான் ஸ்வாமியே என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, வெளியில் ஏதோ, மநுஷ்யன் போல் வேஷம் போடுவதால், அவருக்குக் கொஞ்சங்கூட தோஷமோ, குறைவோ வந்துவிடவில்லை.


மொத்தத்தில் ஹிந்து மதம் எனப்படும் வைதிக நெறி அவதாரக் கொள்கையை ஏற்கிறது என்றே சொல்லி விடலாம். ஏனென்றால், சைவர்களும் தங்களது முழுமுதற் கடவுளான சிவ பெருமான் அவதரிப்பதில்லை என்று சொன்ன போதிலும், மகாவிஷ்ணு தசாவதாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள்.


பலவிதமான தேசங்கள், அவற்றில் பலவிதமான சீதோஷ்ண ஸ்திதிகள், அதற்கேற்ற பயிர் பச்சைகள், இவை எல்லாவற்றுக்கும் அநுகுணமாக பிற்பாடு ஒரு பண்பாடு என்று லோகத்தில் இருக்கிறது. இதில் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதான வேதம்தான் ஆதியில் எல்லாவிடத்திலும் இருந்திருக்கிறது. பிற்பாடு அங்கங்கே ஜனங்களின் ஆசை அபிலாஷைகள் மாறி மாறி, அதிலிருந்தே அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அநுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் எந்த மதத்தைப் பார்த்தாலும்—இப்போது அநுஷ்டானத்தில் இருக்கப்பட்ட மதங்கள், இந்த மதங்களுக்கு முன்னால் அந்த தேசங்களில் இருந்த பூர்வீக மதங்கள் இவற்றில் எதைப் பார்த்தாலும்—அதிலெல்லாம் வைதிக மதத்தின் அம்சங்கள், சின்னங்கள் இருக்கின்றன. பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கி விட்டது. 

அதற்கப்புறமும் அது காலத்தால் தனக்கு பிற்பட்ட மதங்களை கௌரவ புத்தியுடனேயே பார்த்திருக்கிறது. ‘அந்த அன்னிய ஜனங்களின் பக்குவத்தை ஒட்டியே இந்த அன்னிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. இவையே அவர்களுக்கு சிரேயஸைத் தரும்’ என்று கருதியிருக்கிறது. 

‘தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது’ (live and let live) என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.


🙏🙏🙏🙏

சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு (criticism) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். 

ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. 

வர்ணங்கள் நாலுதான்; ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்ணத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டியார், நாயக்கர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம்—முன்றாவது அஷ்டகம்—நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப் பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. 

அதெப்படியானாலும் ஜாதிகள் பல; வர்ணங்கள் நாலே நாலுதான். 

‘நம் மதத்துக்கே பெரிய களங்கம்; மநுஷ்யர்களிடையே உசத்தி-தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு’ என்று இப்போது நினைக்கப்படுகிற 

வர்ண தர்மம் என்ன என்று, 

நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், 

சமுதாய வாழ்வின் ஒழுங்குக்காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது

 என்று தெளிவாகும்.

🙏🙏🙏🙏


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


References -


Deivathin Kural Chapters containing the voice of clarity on vedic hinduism and vedic sciences..


https://www.kamakoti.org/tamil/part1kurall24.htm

https://www.kamakoti.org/tamil/part1kural43.htm

https://www.kamakoti.org/tamil/part1kural28.htm

https://www.kamakoti.org/tamil/part1kural29.htm

https://www.kamakoti.org/tamil/part1kural30.htm


Wednesday, July 20, 2022

நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா... தீக்குள் விரலைவைத்தால்.. கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி... Sagitarius A - Galaxial center - Alternate foci of our Solar system

Reinhard Genzel மற்றும் Andrea Ghez ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, Sagittarius A* (தனுசு, மூல நட்சத்திரம் அருகில் உள்ளது) என்பது ஒரு மிகப்பெரிய கச்சிதமான பொருள், இதற்கு கருந்துளை மட்டுமே அந்த நேரத்தில் நம்பத்தகுந்த விளக்கமாக இருந்தது.

1980களில் இருந்து, Sgr A* இன் மையக் கூறு கருந்துளையாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது. 1994 ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற சார்லஸ் ஹெச். டவுன்ஸ் மற்றும் வருங்கால நோபல் பரிசு வென்ற ரெய்ன்ஹார்ட் ஜென்செல் ஆகியோரை உள்ளடக்கிய பெர்க்லி குழுவின் அகச்சிவப்பு மற்றும் சப்மில்லிமீட்டர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆய்வுகள் Sgr A* இன் நிறை இறுக்கமாக செறிவூட்டப்பட்டதாகவும், 3 மில்லியன் சூரியன்களின் வரிசையில் இருப்பதையும் காட்டியது.

உண்மையில் 10 மில்லியன் சூரியன்கள் இருந்தால் அது கோடி சூரிய பிரகாசமாக இருக்கும்!!!


சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி...



காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 

கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 

தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.


மூல நட்சத்திரம்: 0: முதல் 13:20 வரை பரவுகிறது தனு ராசி, இறைவன் வியாழன் (குரு). சின்னம் - ஒன்றாக இணைக்கப்பட்ட வேர்கள், தெய்வம் 'நிரிதி' அல்லது 'அலக்ஷ்மி'. இதற்கு 'எதிர்' அல்லது 'தலைகீழ்' என்றும் பொருள். (உலகாயதமாக, ஜோதிட பல சாஸ்திரத்தின்படி, மூல நட்சத்திரம் நல்ல நட்சத்திரங்களில் ஒன்றல்ல, தெய்வம் - அலட்சுமி/அழிவு என்பது இதிலிருந்து தெரிகிறது... அதிர்ஷ்ட/காணக்கிடைக்காத கடவுள் என்பதும் உணர்கிறோம்... dual natured star, depends on point of view of the subject)





வேத காலத்தில் மூல நட்சத்திரம் விச்ரிதா அல்லது விச்ரிதௌ என்றும் அழைக்கப்பட்டது மற்றும் ஒன்று அல்லது இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டது. சித்தாந்தங்கள் நட்சத்திர தலவிருட்சத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையைக் கொடுக்கின்றன. மேற்கத்திய வானியல் நிபுணர் என்று அழைக்கப்படும் கோல்ப்ரூக், சுட்டிக்காட்டப்பட்ட நட்சத்திரம் 2 விருச்சிகஸ்யா (மேற்கத்திய வரைபடங்களின் லாம்ப்டா ஸ்கார்பியோனிஸ் அல்லது ஷௌலா நட்சத்திரம்) என்பதைக் கண்டறிந்தார்; மற்றும் அதன் துணை நட்சத்திரம் சந்தேகத்திற்கு இடமின்றி மேற்கத்திய அட்டவணையில் 7 விருச்சிகஸ்யா (லெசாத்துடன் தொடர்புடைய கோல்ப்ரூக்) ஆகும். 

வேத காலத்தில் மூல நட்சத்திரம் விச்ரிதா அல்லது விச்ரிதௌ - லாம்ப்டா ஸ்கார்பியோனிஸ் அல்லது ஷௌலா நட்சத்திரம்

இந்த இரண்டு நட்சத்திரங்களும் வேத அட்டவணையில் விருச்சிக விண்மீன் தொகுப்பில் 2 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்டுள்ளன.

நிற்க...


ரிஷிகள் கண்ணால் கண்டதையும் / கண்களால் காணாததையும் எழுதி வைத்தார்கள்.

வேத காலத்திலிருந்து திரும்பவும் திரும்பவும் எழுதப்பட்டவன் விஷ்ணுவே!!







விஷ்ணு என்பதும் விஸ்வ மூல காரணன் என்ற கூட்டுப்பெயரே.. ('one who is everything and inside everything' / 'all pervasive' )


சாஃஷாத் மூலப்பிரமணாய (மூல + பிரமணாய ), விஷ்ணோஹோ அமித தேஜஸே!!


மூலப்ரமாணமான, அமிதமயமான அளவிடமுடியா தேஜஸ்வியான, விஸ்வமூலகாரணன் - விஷ்ணு 


தீயின் வடிவில், கரிய நிற மேனியாக, பல லட்சம் சூரியர்களை விழுங்கி, அன்று முதலாய் புதியதாய் தோன்றுமந்த, 

"பிரணவ" உருவத்தை போற்றுவாம்..

ஒரு கோடி சூரியகோள்களை விழுங்கிப்பின் நிலைத்திருக்கும் மூலப்ரமாணம்,

Sagitarius A - மூலப்ரமாணம், விஷ்ணுவின் உருவமே!!



 இந்த அண்டத்தை விழுங்கும் நாள்வரை, இதை காக்கும் "கோள ஈர்ப்பு சக்தியை" உடைய 

galaxial center, விஷ்ணுவின் உருவமே!!







மற்றும் 

நம் சூரிய மண்டலத்திலும், சூரியனை தாண்டி, இந்த நீள்வட்டத்தின் இன்னொரு நடுப்பாகத்திலிருக்கும் 

"கரிய திருமேனியும்" (சூக்ஷ்ம பிரம்மா), விஷ்ணுவின் உருவமே!!



முழுப் பிரபஞ்சமும் அவருடைய அண்ட/உடல் உடலாகும். இந்த உலகமும் அதன் வாழ்க்கை வடிவங்களுடன்.. இதை நினைவுகூரும்போது நாமும் உன்னதமாகவும்,  தெய்வீகமாகவும் மாறுகிறோம்.. 


இன்று அவரை நினைவு கொள்வோம், இந்த விஸ்வத்தின் விஷ்ணு, ஏனென்றால், அவர் மறக்க முடியாத அளவுக்கு அருகில் இருக்கிறார், நாம் அவருடைய உருவத்தில் இருக்கிறோம். 



தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்


"Reinhard Genzel and Andrea Ghez were awarded the 2020 Nobel Prize in Physics for their discovery that Sagittarius A* is a supermassive compact object, for which a black hole was the only plausible explanation at the time."

"Since the 1980s, it has been evident that the central component of Sgr A* is likely a black hole. In 1994, infrared and submillimetre spectroscopy studies by a Berkeley team involving Nobel Laureate Charles H. Townes and future Nobel Prize Winner Reinhard Genzel showed that the mass of Sgr A* was tightly concentrated and of the order 3 million Suns"

if it were 10 million Suns actually, it would be Kodi Surya Prakasam!!!

The observations of several stars orbiting Sagittarius A*, particularly star S2, have been used to determine the mass and upper limits on the radius of the object. Based on mass and increasingly precise radius limits, astronomers have concluded that Sagittarius A* must be the Milky Way's central supermassive black hole. The current value of its mass is 4.154±0.014 million solar masses.

Sagittarius A*  is the supermassive black hole[4][5][6] at the Galactic Center of the Milky Way

It is located near the border of the constellations Sagittarius and Scorpius, about 5.6° south of the ecliptic, visually close to the Butterfly Cluster (M6) and Lambda Scorpii.

In the Vedic age the Mula Nakshatra was also called Vichrita or Vichritau and consisted of one or two stars. The Siddhanta’s gives the latitude and longitude of the head-star. Colebrooke, a so called expert of Western astronomy found that the star indicated is 2 Vrishchikasya (Lambda Scorpionis or the star Shaulah of the Western maps); and its companion star is undoubtedly 7 Vrishchikasya (which Colebrooke related to Lesath) of the western charts. These two stars are marked 2 and 7 in the constellation Vrishchika in Vedic Charts.

Entire universe is His cosmic/physical body. This world too with its life forms.. when we remember this, we become sublime and divine too.. Let's remember Him today, The Vishnu of this Viswam, for, He is too near to be forgotten and we are in His image.


Tatvamasi. Sivoham. Hari Om

(to be continued)


https://en.wikipedia.org/wiki/Sagittarius_A*

https://officerspulse.com/sagittarius-a/


https://virendrabattu.wordpress.com/


The Siddhanta’s do not give the names of the individual stars composing any Nakshatra. But, from the Vedas, we can have the names of the two stars composing the old Nakshatra Vichritau. The Nakshatra was commonly called Mula, an abbreviation of the full name Mula Varhanni. Vichritau means ‘destroyer of one’s own race’. The Nakshatra had Nirriti for its presiding deity.

Now Nirriti means either Yama (the God of Death) or Raksheshwara, i.e., Ravana, the King of Rakshas or demons – the mythical demonic king in the epic Ramayana. The Atharva Veda declares

Jyeshthayaam jaataha vichritah yamasya

Meaning Valmiki puts to the mouth of Lakshmana, that Mula the patron Nakshatra of the demons is blackened and crushed by the touch of long-tailed Comet. In Vedic period the Nakshatra had, as I said, two stars. These two stars are said in the Vedas to be the two dogs of Yama, called Sablau. These dogs guard the path to Yama’s abode and look for the dying man! These section of stars in the Milky Way were known to belong to Pitriyana – or the path of the Pitris or the dear departed ancestors!


Sunday, July 17, 2022

துர்கா / காளி உபாசனை - விக்ரமாதித்தன் கதையின், பொற்கால மாந்தர்களின் வாழ்க்கை தத்துவம்

 


துர்க்கை தனி கோவிலில் இருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக வடக்கு / வடகிழக்கு பார்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால், யந்திரங்கள் மற்றும் மந்திரங்களால் அவை வலுவூட்டப்பட்டிருக்கும். அதனுடன் ஒரு தீர்த்தமும், ஒரு மரமும் (அரசு அல்லது ஆல் அதற்கு சமமானது) சேர்ந்திருந்தால், அது தேவர்களின் உலகத்துக்கு வாயிலாக மாறும்... 

விக்ரமாதித்யன் எப்படி அழியாத் தன்மையை அடைந்தார் என்பது பற்றி கதை ஒன்று  உள்ளது. 

விக்ரமாதித்யன் வாழ்ந்த உஜ்ஜைனி நகரத்தின் கதையை பார்ப்போம்..








விக்ரமாதித்யன் எப்படி காளியின் தரிசனத்தையும், கடாக்ஷத்தையும் அடைந்தான் என்பதை அது  விளக்குகிறது.

ஏழு வியாஹ்ருதிகளை ஒரே அடியில் கடப்பது எப்படி என்பது இக்கதையில் குறியீடாக உள்ளது. 

ஏழு சக்கரங்கள், ஏழு வியாஹ்ருதிகள், அந்த சக்கரங்களில் நெய்யப்பட்ட குண்டலினி, தேவியின் மூல சக்தி. மேலும் தீர்த்தக்கரை, தேவியின் அமிர்த தாரையை நம்முள் பாய்ச்சும். 

நமக்கு மேலே உள்ள 7 வ்யாஹ்ருதிகளின் (பூ, புவ, சுவர்க்க, மஹ, ஜன, தப, சத்ய) / சக்கரங்கள் அல்லது பிரபஞ்ச மண்டலங்கள்  நமது விதியை நிர்ணயம் செய்கிறது. 

இந்த வ்யாஹ்ருதிகள் நம்மைக்கைப்பற்றும் சமயம், அல்லது அதை நாம் கைப்பற்றும் சமயம், பிரகிருதியின் இயல்புக்கு  முன் நாம் வேகமாகக் இவற்றை கடந்து, அமிர்த தாரையை அடைய முடியும் என்று விளக்குகிறது.

மூன்று சகோதரர்களின் கதை.. (பர்த்ருஹரி, விக்ரமாதித்யன், பட்டி)

ஒருவர் கவியாகவும் சந்நியாசியாகவும் (பர்த்ருஹரி) ஆனார்.

மற்ற இருவரும் மகோன்னதமான தேவ சாம்ராஜ்யத்தை காளியின் (துர்கையின்) அருளால் படைத்தார்கள். இறவாப்புகழ் பெற்றார்கள்..


மேலும், 

இவர்களைப்போலவே, 

சோழ சாம்ராஜ்யத்தில், மாமல்லரின் மகள் வயிற்று பெரும் பெயரர்களாக பிறந்தனர் இன்னொரு மூவர்..

முக்தனாகவே வாழ்ந்த விஜயாலயரின் பெரும் பெயரர்களாக இருந்தனர்.. சிதம்பரத்தில் பொன் கூரை வேய்ந்த பராந்தகன் I மற்றும் திருமுறை பதிற்றுவித்த கண்டராதித்தர், செம்பியன் மாதேவி வழியில் இவர்கள், தியாகத்தாலும், ஆன்ம வளத்தாலும், துர்கையின் அருள் பெற்றனர்.

ஆதித்ய கரிகாலன் தன் உயிர் போகும் என்று தெரிந்த பொழுதும் இறவா தேவ சாம்ராஜ்யம் அமையும் என்று அறிந்த  பொழுது, தன் உயிரை பணயமாக வைத்து, தனது தங்கை (குந்தவை) மற்றும் சகோதரனின் (ராஜராஜன்) வெற்றிக்கு உதவினான். 

அன்பில் அநிருத்த பிரம்ம ராயர் அன்று அந்த பொற்காலம் அமைய தளமிட்டார்..



துர்கையின் அருள் பெற்ற வந்தியத்தேவனை, மருமகனாக்கி அந்த சகோதர்கள், இந்த தமிழ்த்திருநாட்டின் / இந்தியாவின் பொற்காலம் (600 ஆண்டு காலம்) அமைய உழைத்தனர்.

துர்கா தேவி அவர்கள் நினைத்ததை அளித்தாள்!!

பட்டீஸ்வரம் துர்கை அவர்கள் நம்பிக்கையை, நினைவை நமக்கு காட்டுகிறாள்...


மேலும், 

இவர்களைப்போலவே, அன்னையின் அருளால் வித்யாரண்யர், அவர்தம் சகோதரர்கள் (மாதவர் மற்றும் சாயனர்), சிக்மகளூர் அருகே பாரத்வாஜ கோத்ர அந்தணர் குடும்பத்தில் பிறந்தனர்.

மூத்தவர் சிருங்கேரி மடாதிபதி ஆனார். இளையவர் இருவரும், அவர் அமைத்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் (ஹரிஹரர் மற்றும் புக்கர் ) கனவை சாதித்தனர்.

மாதவர் பிரதம மந்திரியாக சாம்ராஜ்யத்திற்கு உதவினார். சாயனர் இறவா நூல்களை எழுதி, ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டு உதவினார். இருவரும், திராவிட தேசங்களில் உள்ள பூசாரிக்குழுக்களை ஒன்றிணைத்து (அந்தணர் / பிராம்மணர்),  ஹிந்து வேத மதம் தழைக்க பெரும் செயல் செய்தனர்..



துர்கா தேவியின் கருணை அளப்பரியது.. 

இந்த மூன்று சகோதரர்களின் / சகோதர சகோதரிகளின் வரலாற்று நிகழ்வுகள் அவள் வருவதை உணர்த்தும்.. 

மகோன்னதமான அவள் பெருமை இவ்வுலகத்திற்கு உணர்த்தப்படும்..


இன்றும் காளியின் அருள்பெற்ற ராமகிருஷ்ணரின் / விவேகானந்தரின் சீடர் பெருமக்கள், காளியின் / துர்கையின் அருளால், பேரிடர்களை போக்குகினறனர்..



தான் நினைத்ததை செய்யும் சக்தி பெற்றவள், அவள்..

அவளை தடுக்கும் சக்தி ஏழு உலகிலும் இல்லை.

ஏழு உலகங்களும் (வ்யாஹ்ருதிகளும் ) அவளின் வரவிற்கு காத்திருக்கும்..

தனது ப்ரஹ்ம தண்டத்தால், தியாகத்தால், ஏழு வ்யாஹ்ருதிகளையும் கடந்து சென்று, தேவ சாம்ராஜ்யத்தை இந்நிலவுலகில் (நிலவு + உலகு) அமைக்க முடியும் என்று காட்டினார் தவ சீலர்கள்..



(விஜய) துர்கா தேவி.....


"அக்னியின் நிறத்தில் இருப்பவளும், தவத்தினால் ஜொலிப்பவளும், அக்னியிலே பிறந்தவளும், கர்மத்தின் பலனை அளிப்பவளும், அப்பலனால் துதிக்கப்படுபவளும் ஆகிய துர்கையின் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்"

காலம் காலமாக எவ்வாறாகிலும் துதிப்பவர்களுக்கும், துதிக்கப்படுபவர்களுக்கும், அவர்களது தியானத்தின்/தவத்தின் ஒரு சாவி இருக்குமானால், அவ்வுயிர்களின் எல்லையில்லா நித்ய அன்பிற்கு ஒரு ஒளி வழிப்பாதை இருக்குமானால், நொடி பொழுதில் ஒரு உயிர் சக்தியை உருவாக்க இயலும்!!!

காலம் இப்பிரபஞ்சத்தை இயக்குவதால், நிர்ணயிப்பதால், துர்கை, தீயவற்றை காலவெள்ளத்திலும், துதிப்பவரை தன்னுள்ளும் இணைக்கிறாள். நொடியில் அவர்களது கர்மத்தின் பலனை அளிக்கிறாள்!!

-----------------------------------------------------------------------------------------------------------------

கோட்டை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

கோட்டைக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘துர்கம்’ என்று பெயர். ‘ஸுலபத்தில் பிரவேசிக்க முடியாதது’ என்று அர்த்தம். இஹத்திலும் பரத்திலும் பெரிய ரக்ஷையாக இருக்கிற அம்பிகையை ‘துர்கா’ என்கிறோம். வடக்கே ‘துர்க்’என்று முடிகிற அநேக ஊர்கள் அங்கேயெல்லாம் பூர்வத்தில் கோட்டைகள் இருந்ததைக் காட்டுகின்றன. ‘கட்’ (gad), ‘காடா’ (gada) என்று முடிகிற ஊர்களும் இப்படியேதான். தமிழ்தேசத்திலும் ஊத்துக்கோட்டை, புதுக்கோட்டை, செங்கோட்டை, பாளையங்கோட்டை என்று அநேக ஊர்கள் இருக்கின்றன. செஞ்சிக் கோட்டையும் வேலூர்க் கோட்டையும் ‘டூரிஸிட் ஸென்டர்’களாக இருக்கின்றன. இவற்றிலே எத்தனையோ மர்மங்கள்; பண்டங்களும் மநுஷ்யர்களும் (முக்யமாகக் ஸ்த்ரீகள்) எதிரிகள் கையில் சிக்காமலிருப்பதற்காக நிலவறை என்று அண்டர்-க்ரவுண்டில் வைத்திருப்பது முதலான பல ஏற்பாடுகள்.

வ்யூஹம் மாதிரியே கோட்டையிலும் பல அமைப்பு முறைகள் உண்டு. கோட்டை நிர்மாணத்தாலேயே நாடு நகரத்துக்கு க்ஷேமம் உண்டாகும்படியாக அவற்றை சாஸ்த்ரவத்தாக, மந்த்ர பூர்வமாகப் பண்ணவும் வழி இருக்கிறது. ‘சயனம்’ என்பதாக வேதத்தில் யஜ்ஞங்களில் செய்த கட்டுமானங்களுக்கான ரூல்களின் அடிப்படையிலேயே கோட்டை நிர்மாணம் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். மநுஷ்ய ஸாமர்த்யத்தோடு மந்த்ரங்களாலும், வைதிகமான வடிவமைப்புகளாலும் ஏற்படுகிற தெய்வ சக்தியும் கோட்டை அமைப்பதில் பிரயோஜனமாயிருந்திருக்கிறது. ஸ்ரீ சக்ரம், ஷ்ட்கோணம், ஸுதர்சன சக்ரம் என்றெல்லாம் சொல்பவை கூடச் சிலவித வடிவமைப்பினாலேயே திவ்ய சக்தியைப் பெறுவதுதானே? இப்படி காஞ்சிபுர நகரத்தையே ஸ்ரீ சக்ர ரூபத்தில் ஆசார்யாள் புனர் நிர்மாணம் பண்ணித் தந்தாராம். கோட்டையிலும் இப்படி சக்ராகாரம், பத்மாகாரம் என்று பல டிஸைன்கள். கோவிந்த தீக்ஷிதர் தஞ்சாவூரில் புதிதாக காருடமாக (கருட ரூபத்தில்) கோட்டைக் கட்டச் செய்தாரம்.

கோட்டை பற்றிய இப்படிப்பட்ட அருமையான தத்வங்கள், செய்முறை எல்லாவற்றையும் இப்போது நாம் கோட்டை விட்டுவிட்டு நிற்கிறோம்!

பழைய கோட்டை அத்தனையும் relic -ஆக (இடிபாடாக) நிற்க விட்டிருப்பது தான் நம் பெருமையாயிருக்கிறது!

-----------------------------------------------------------------------------------------------------------------

நாமும் புதிய பொற்கால கோட்டைகள் (துர்கம்) கட்டுவோமாக!! 


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


References and futher reading

http://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post_8.html

https://en.wikipedia.org/wiki/Vidyaranya

https://en.wikipedia.org/wiki/Vijayalaya_Choleeswaram

https://en.wikipedia.org/wiki/Bhart%E1%B9%9Bhari

Saturday, July 16, 2022

ரக்ஷா பந்தன் - மூலமும், மறுவியது எப்படி ?

ச்ராவண பூர்ணிமா அன்று எல்லா வேத மார்கங்களை  சேர்ந்தவரும், தத்தம் பூணூலை / தேவ மற்றும் தெய்வ  காப்புகளை மாற்றி, தேவ வாழ்விற்கு சங்கல்பம் செய்து, சுவாமி மற்றும் குருமார்களின் ஆசியால், தீர்த்தமாடி, பாவம் களைந்து, மன உறுதி கொள்ள வேண்டும்.

"When the sky is covered with clouds, and the earth dark with new, tender, grass, in that very Shravana month's full moon day, at the time of sunrise..." - Lord Krishna to Pandavas




பிறப்பாலோ / வாழ்க்கை முறையாலோ ப்ராஹ்மணராக / அந்தணராக வாழுபவர், பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாளன்று (ச்ராவண பூர்ணிமா), உபாகர்மா செய்து, தனக்கும் சமூகத்திற்கும் காப்பு இட வேண்டும்!!!

https://bharathavamsavali.blogspot.com/2022/07/blog-post.html


இதை வழி வழியாக செய்து வருகிறோம்.


இன்று 100 வருடங்களில் ஏற்பட்ட பழக்கம் அன்று!!!


ப்ராஹ்மணர்களில் பலரும், பெண்களும் இதை காத்து வருகிறார்கள்.



வேத விஞ்ஞானம் எல்லாருக்கும் உரியது. ஏற்றுக்கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம்.


எவ்வளவோ நவீன விஞ்ஞானம் பயின்ற மேற்கத்திய விஞ்ஞானிகள் வேத மார்கத்தை / வேத விஞ்ஞானத்தை  என்று கொண்டுள்ளனர்..


நீல் போர், ஜான் டாப்சன், எர்வின் ஷ்ரோடிங்கர், கார்ல் சகன்..


ஆன்மீக அரங்கில் தேயோசோபிக்கால் சொசைட்டி போன்று பல அமைப்புகள்..


மற்றைய ஏனையோரும் இதை மேற்கொள்ள வேண்டும்.

அதுவே நாட்டிற்கு, சமூகத்திற்கு, இந்த பூமிக்கு நல்லது.


உற்று நோக்குங்கால், பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாள் (ச்ராவண பூர்ணிமா), எல்லா வர்ணத்தவர்க்கும் (பிறப்பாலோ / வாழ்க்கை முறையாலோ), மதத்தவருக்கும், தேசத்தவருக்கும் கூட உரியது. ஹிந்துக்களுக்கு மட்டும் என்று கொள்ள வேண்டியதில்லை.




தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்
(தொடரும்)


https://en.wikipedia.org/wiki/Raksha_Bandhan


Raksha Bandhan is observed on the last day of the Hindu lunar calendar month of Shraavana, which typically falls in August. The expression "Raksha Bandhan," Sanskrit, literally, "the bond of protection, obligation, or care," is now principally applied to this ritual. 

"Until the mid-20th-century, the expression was more commonly applied to a similar ritual, also held on the same day, with precedence in ancient Hindu texts, in which a domestic priest ties amulets, charms, or threads on the wrists of his patrons, or changes their sacred thread, and receives gifts of money; in some places, this is still the case."


Important in the Great Tradition is chapter 137 of the Uttara Parva of the Bhavishya Purana,[7] in which the Hindu god Krishna describes to Yudhishthira the ritual of having a raksha (protection) tied to his right wrist by the royal priest (the rajpurohit) on the purnima (full moon day) of the Hindu lunar calendar month of Shravana).[44] In the crucial passage, Krishna says,

"Parth (applied to any of the three sons of Kunti (also, Pritha), in particular, Yudhishthira): When the sky is covered with clouds, and the earth dark with new, tender, grass, in that very Shravana month's full moon day, at the time of sunrise, according to remembered convention, a Brahmin should take a bath with perfectly pure water. He should also according to his ability, offer libations of water to the gods, to the paternal ancestors, as prescribed by the Vedas for the task required to be accomplished before the study of the Vedas, to the sages, and as directed by the gods carry out and bring to a satisfactory conclusion the shradh ceremony to honor the deceased. It is commended that a Shudra should also make a charitable offering, and take a bath accompanied by the mantras. That very day, in the early afternoon (between noon and 3 PM) it is commended that a small parcel (bundle or packet) be prepared from a new cotton or silk cloth and adorned with whole grains of rice or barley, small mustard seeds, and red ocher powder, and made exceedingly wondrous, be placed in a suitable dish or receptacle. ... the purohit should bind this packet on the king's wrist with the words,'I am binding raksha (protection) to you with the same true words with which I bound Mahabali King of the Asuras. Always stay firm in resolve.' In the same manner as the king, after offering prayers to the Brahmins, the Brahmins, KshatriyasVaishyas and Shudras should conclude their Raksha Bandhan ceremony."

Friday, July 15, 2022

ச்ராவண பூர்ணிமா (ஆவணி அவிட்டம் / உபாகர்மா) முக்கியத்துவம் என்ன ?

 




உபாகர்மா என்று நாம் கூறும் (தொடக்கம் / புதுப்பித்தல் / புது தொடக்கம் என்றும் கொள்ளலாம். இக்காலத்தில், Plan B / Maintenance Work என்றும் கூறலாம்)  இந்த பண்டிகையாகிவிட்ட (!!) இந்நாள் இப்படி இருக்கவில்லை.
காலவெள்ளத்தில், ஒரு 7000/8000 ஆண்டுகள் முன் சென்றால், இந்த நாளை எப்படி உபயோகப்படுத்தினார்கள் என்று சிந்திப்போம்.

இவற்றை சில கேள்விகளாக கேட்போம்..

1) ஏன் ச்ராவண பௌர்ணமியை தேர்ந்து எடுத்தார்கள் ?

உபாகர்ம சங்கல்பம் இந்த நாளை (ச்ராவண பௌர்ணமியை - ச்ராவண மாசத்தில் பௌர்ணமி திருவோண/ச்ராவண நக்ஷத்திரத்தில் வரும், நிறைய சமயம் அவிட்ட / தனிஷ்டா நக்ஷத்திரத்தில் இதை கொண்டாடுகிறோம்), இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாளாக அறிவிக்கிறது... ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவஸே, துவிதீயே யாமே, த்ரிதீயே முஹுர்த்தே என்று தொடங்குகிறது. நேரமும் காலமும் குறிக்கப்படுகிறது.
நவீன விஞ்ஞானத்தில் இதை big bang என்று குறிக்கிறார்கள்.
பெரு வெடிப்பு / ஸுப்ரஹ்மண்ய ஸ்ருஷ்டி / ஆறுமுக தோற்றம் (6 quarks of the universe  from primordial soup)

http://bharathavamsavali.blogspot.com/2021/06/6-darsanas-and-6-protovirtual-religions.html

http://bharathavamsavali.blogspot.com/2021/12/blog-post_23.html

http://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html

https://en.wikipedia.org/wiki/Big_Bang

https://en.wikipedia.org/wiki/Quark

2) ஏன் ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிறது ?

உபாகர்ம சங்கல்பம் இந்த நாளை (ச்ராவண பௌர்ணமியை - ச்ராவண மாசத்தில் பௌர்ணமி திருவோண/ச்ராவண நக்ஷத்திரத்தில் வரும்) நிறைய சமயம் அவிட்ட / தனிஷ்டா நக்ஷத்திரத்தில் அறிவிக்கிறது..

3) உபாகர்ம சங்கல்பம் என்ன சொல்கிறது ?

உபாகர்ம சங்கல்பம் இந்த நாளை பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாளாக அறிவிக்கிறது... ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவஸே, துவிதீயே யாமே, த்ரிதீயே முஹுர்த்தே என்று தொடங்குகிறது. நேரமும் காலமும் குறிக்கப்படுகிறது.

இந்நாளில் முக்கியமாக, வேதாரம்பம் செய்ய வேண்டியவர் செய்வர்.

வேதத்தின் எல்லா அவயங்களையும் ( சம்ஹிதைகள், ப்ராஹ்மணம், ஆருணம், காடகம், மந்த்ர ப்ரச்னம், பல வேதாங்கங்கள், சூத்திரங்கள், மஹேந்திர சூத்திரம் / தர்ம சூத்திரம், வியாகரணம்,  தத்தம் வேதங்கள் உட்பட,  மற்ற வேதங்கள், வேதாந்தம் வரை ) கற்பேன் / காப்பேன் என்று உறுதி கொள்கிறோம்.

நித்யம் பிரம்ம யஃஞம் (வேத பாடம், விஷ்ணு சகிதமாக தேவர் கூட்டத்தை த்யானம் செய்தல், தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்) செய்து கொண்டிருந்த நிலை மாறி, வேதத்தை கைவிட்டு, 
வருடம் ஒருமுறையாவது வாழ்ந்த வாழ்க்கையின் எச்சத்தை கைக்கொள்கிறோம்...
என்றோ ஒரு நாள் சகுண ப்ரஹ்மத்தை அடைவேன் (நிர்குண ப்ரஹ்மமாக உணர்வேன்) அதற்கான புண்ய  கர்மாவை செய்வேன் என்று உறுதி பூணுகிறோம்..

சில ப்ராஹ்மண சமூக ஹோமங்களும், பிரார்த்தனை மந்திரத்தை சொல்லி, ஆசீர்வாதத்துடன் முடிக்கிறோம்..

4) மஹாசங்கல்பம் என்ன சொல்கிறது ?

ஆதி விஷ்ணு, கற்பனை செய்யமுடியாத, எல்லையில்லாத (infinite), தனது சக்தியால், வாஞ்சையுடன்/ப்ரியமுடன்  அமைத்த இந்த பெரும் பிரபஞ்சத்தின் (பிர + பஞ்ச - மீண்டும் ஐந்து) நடுவே,

 நீந்திச்செல்லும் பல கோடி அண்டங்களுள், ஒன்றில், குணமிலா பெருங்கடலான, மூல ப்ரமாணமான, மஹத் அஹங்காரமான, பஞ்ச பூதங்களையே  வாழ்விடமாக கொண்ட மண்டலத்தில், ஆதார சக்தியாக விளங்கும், ஆதி கூர்மமாய் (எதையும் தாங்கும் ஓடு உடைய ஜீவனாய்) இருந்து கொண்டு (அண்ட மத்தியில் இருக்கும் அடர்பொருளை குறிக்கும் - black hole of galaxial center), 

பரம ஆனந்த ஸ்வரூபியாய், எட்டு திசைகளிலும் யானை போன்ற உயிர்களால் தாங்கப்படும், 1008 உலகங்களை தன் உடலாய் காக்கும், விஷ்ணுவின் அணுக்கத்தொண்டனான ஆதி சேஷ நாகத்தால் காக்கப்படும், பல மண்டலங்களுல் ஒன்றில், 

நிலை மாறாமல் காக்கப்படும் இந்த பூமியில்,

ஏழு கடல்களுக்கு மத்தியில்,
ஏழு த்வீபங்களுள், 
ஒன்பது கண்டங்களுள், 

மேலும், பல மலைத்தொடர்களால் சூழப்பட்ட, பூப்போன்ற, 500 கோடி யோஜனை விஸ்தீர்ணம் கொண்ட இப்பூமண்டலத்தில் 

பல மலைத்தொடர்கள் கொண்ட இந்த பரத கண்டத்தில்,

உப்புக்கடலால் சூழப்பட்டு,

ஒன்பது வர்ஷங்களாக (நிலப்பகுப்புகளை குறிக்கும்) அழகுற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில்,

ஜம்பு த்வீபத்தில் (நாவல் மரங்கள் நிறைய இருந்த த்வீபம்),
பாரத வர்ஷத்தில்,
பரத கண்டத்தில்,
மேரு பர்வதத்தின் தெற்கில்,
கர்ம பூமியில்,

அவந்தி, குருக்ஷேத்திரத்தையும் கொண்டு,
பூமியின் நடுக்கோட்டின் மேலே இருந்து கொண்டு (north of equator),
விந்திய மலையின் தெற்கே,
தண்டகாரண்யத்திலும், (எங்கெல்லாம் இந்த கர்ம பூமி பரவி உள்ளது என்று விளக்குகிறது)
கோதாவரியின் தெற்கிலும்,

எல்லா உலகங்களை படைத்த, ஞானத்தை கொடுக்கும் ஜீவனான, ப்ரஹ்மாவின் கல்ப கணக்கில்,

ஐநூறாவது (கோடி) வருஷத்தில் (five billion),
500 கோடி ஆண்டுகள் மிச்சமிருக்கும் பொழுது,

(நம் நக்ஷத்திரமான் சூர்யன் 500 கோடி ஆண்டுகள் வயதானது, இன்னுமொரு 500 கோடி ஆண்டுகள் வரை மட்டுமே  இருக்கும்)

(ப்ரத்யக்ஷ ப்ரஹ்மாவான சூரியனுக்கும் மற்றும் விஷ்ணுவால் நியமிக்கப்பட்ட சூக்ஷ்ம பிரம்மாவுக்கும் எனக்கொள்ளவேண்டும் )

முதல் வருஷத்தில் (சங்கல்பம் ப்ரம்மாவின் ஆயுட்காலத்தில் தொடங்குவதால், அவரது ஆயுட்காலம் வரை தொடர்வதால்),

முதல் மாதத்தில் (ச்ராவணமே கல்ப/வருஷ ஆரம்பமாக கொண்டு),
முதல் பக்ஷத்தில் (சுக்ல பக்ஷ பௌர்ணமி ஆதலால்).
முதல் நாளில் (வேத காலத்தில், வருட ஆரம்பமாக, ச்ராவண பௌர்ணமி இருந்தது),
இரண்டாவது யாமத்தில் (உபாகர்மா ஆரம்பிக்கும் நேரம் குறிக்கப்படுகிறது / பின் காலை பொழுது ),
மூன்றாவது முகூர்த்தத்தில் (approximately over 8:24 AM),

ஏழு மன்வந்தரங்களுள் வைவஸ்வத மன்வந்தரத்தில் (மற்ற கட்டுரைகளில் விளக்கப்படுகிறது),

28 சுழற்சிகள் கடந்த பின்னர் (இது கலி 2800 ஆண்டுகள்  என்று குறிக்க  முடியும் அல்லது 28 ஆவது 60 வருட சுழற்சி என்று எடுத்து கொண்டால் கி.மு 1421 என்றும் கொள்ளலாம், அப்போதிலிருந்து இந்த முறை இந்த வடிவத்தில் இருக்கிறது என்று கொள்ளலாம், அதற்கு முன்னர் இது வேறு வடிவத்தில் இருந்திருக்கும்),

கலியுகத்தின் முதல் பாதியில்,

சாலிவாகன சகாப்தத்தில் (விக்ரமாதித்யனின் காலத்திற்கு சற்று பின்னர் எனக்கொள்ளலாம்),
சந்திர மற்றும் சூர்ய மானத்திலும் (lunar or solar astronomical method),
பிரபவ முதலான, 60 வருட கணக்கின் மத்தியில்....

(இப்பொழுது நாம் உபாகர்மா செய்யும் நேரம் குறிக்கப்படுகிறது, .. நாம சம்வத்சரே, மற்றும், .. ருது, .. மாஸே, பக்ஷே, .. திதி, .. வாசரஹ, .. நக்ஷத்திர யுக்தாயாம்... ) 

ச்ராவண அல்லது தனிஷ்டை நக்ஷத்திரத்தில்,

சுப யோகமான, சுப கரணமான, பல விசேஷங்கள் கொண்ட நன்னாளில்,

பௌர்ணமியில்,

எல்லா பாபங்களையும் அழிக்கும் நிபுணனான,

ஸ்ரீ பரமேஸ்வரனான சதாசிவனை / ஸ்ரீமன் நாராயணனை திருப்தி செய்ய, அவனுக்கு பிடித்தமான இந்த செயலால்/சங்கல்பத்தால்,

காலக்கணக்கிட முடியாத அஞ்ஞானத்தை கொண்ட, அந்த வாசனையில் உழலும், 

நான்,

அதிவேகம் கொண்ட, வேகமானது ஏறிக்கொண்டே இருக்கும்,

என்னுடைய பெரும் பிழையால், 

சம்சார சக்ரத்தின் விசித்திரத்தினால்!!!,

கர்ம தளைகள் இழுப்பதால்,

விசித்திரமான இச்சுழலில்,

தாயின் வயிற்றிலிருந்து, திரும்ப திரும்ப பிறக்கும் நான்,

பல முறை பிறந்த பின்னர்,

ஏதோ காலத்தில் செய்த புண்ய கர்ம விசேஷத்தால்,

மனிதனாகப்பிறந்து, 

மறுபிறப்பாளனான ப்ராஹ்மணனாக வாழும் விசேஷ ப்ராப்தம் அடைந்தவனாக,

நான் இந்த பிறப்பிலும், முன்பிறப்பிலும் செய்த பாபங்களை / பாதகங்களை உற்று நோக்கி,

(இங்கே ப்ரஹ்ம ஹத்தியிலிருந்து, மஹாபாதகங்கள் பலவற்றையும், சம பாதகங்கள் பலவற்றையும், மேலும் உப பாதகங்கள் பலவற்றையும் சொல்லி)

 கடைசியில்,

"ப்ராஹ்மணனுக்கு முக்கியமாக விதிக்கப்பட்ட, ஆத்ம க்ஷேமத்திற்கான வேலையை விட்ட, பெரும் பாவத்தை நினைத்து..."

புதிய பாவங்களை உற்பத்தி செய்து,

புது விதமாக பாவங்களை செய்து,

பல பாவங்களும் செய்து, அதை பலமுறை செய்தும்,

இன்று,

எல்லா பாவங்களும் என்னை விட்டு அகல,

பாஸ்கர க்ஷேத்திரத்தில்,

பலப்பல ஸ்வாமி சந்நிதிகளை வணங்கி,

குல தெய்வங்களை வணங்கி, தத்தம் ஊரில் உள்ள ஸ்வாமி சந்நிதிகளை வணங்கி, மற்றும் கிராம தேவதைகளை வணங்கி,

தேவ ப்ராஹ்மண சந்நிதியில்,

அஸ்வத்த நாராயணனை வணங்கி (வ்ருக்ஷ ராஜனான அஸ்வத்த மரத்தை வணங்கி),

33 கோடி தேவதைகளின் சந்நிதியை வணங்கி,

விநாயகர் முதல் தர்ம சாஸ்தாவான, ஹரிஹர புத்திரன் சந்நிதிகளை வணங்கி, ஹரி மற்றும் ஹரனுடைய பரிவார தேவதைகளை வணங்கி,

ச்ராவண மாதம், ச்ராவண / தனிஷ்டை நக்ஷத்திரத்தில், பௌர்ணமியில்,

இந்த உபாகர்மா உடனான மஹா சங்கல்பமும், சங்கல்ப ஸ்னானமும் செய்கிறேன்....

(இக்காலத்தில் நதி / தீர்த்த கட்டத்தில் இல்லாதவர்கள் ஆபோஹிஷ்டா எனத்தொடங்கும் மார்ஜன மந்திரத்தை கூறி 
ஸங்க்ரஹமான / இலகுவான ஸ்னானத்தை செய்யலாம்)

ஸ்னானம் செய்யுமிடத்து பின்வரும் சங்கல்பம் செய்யப்படுகிறது..

பின்வரும் மந்திரங்களை என்னவென்று சொல்வது!!!

இவ்வுலகில் மஹாதேவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரம் இந்த மந்திரங்களில் உள்ளது.
வாழ்நாளில் பல தடவை இதைச்சொல்லி பரம பதம் / விஷ்ணு லோகம் அடைவோமாக..

அதிக்ரூரமான கலிபுருஷனால் ஆட்கொள்ளப்பட்ட நாம், அதை விட பன்மடங்கு பெரிய, கரிய, பலமான தேகத்தை உடைய, கல்பத்தை முடிவில் அழிக்கும், கால பைரவரை நினைப்போமாக...





அவரை வணங்கி, அவரிடம்,  நம் பாவங்களை போக்க உத்தரவு பெற்றுக்கொள்வோமாக..

தீய உணவு, தீய பொருள் / லாபம், தீய செயல்கள் இவற்றை விடுவோமாக..

எம் பாபங்கள் தொலைந்து போகட்டும்..

அதற்கு எனக்கு உதவும் இந்த தீர்த்த / நதி கன்னிகைகளை நமஸ்கரிக்கிறேன்...

மூன்று இரவுகள் கங்கைக்கரையில் இருந்த புண்ணியமும்,

யமுனைக்கரையில் (பிருந்தாவனத்தில்) ஐந்து இரவுகள் இருந்த புண்ணியமும், என்னை வந்து அடையட்டும்...

உண்மையில் திரும்பவும் கேட்டுக்கொள்வது, காவேரி நதிக்கரையில், நான் எனது பாவங்களை முற்றிலும் அழிக்கிறேன்...

கங்கே கங்கே (கோவிந்த கோவிந்த) என்று நினைந்து கொண்டு, 108 யோஜனை தூரமுள்ள இந்த தொலைவை கடக்கிறேன்...

( பூமியிலிருந்து, சூரியனது தேவ யோஜனை தொலைவு, சூரியனிலிருந்து அபிஜித் நக்ஷத்திர கூட்டம் (vega) வரை, சூரியனிலிருந்து நம் பால்வெளி அண்டத்தின் (milky way)  மத்தியிலுள்ள கறுப்பு கணு (black hole) வரை... )

முக்தி அடைவேன் ஆகுக, எனது எல்லா பாவங்களிலும் இருந்தும்...

விஷ்ணு லோகம் அடைவேன் ஆகுக...

"விஷ்ணு லோகம் சகச்சதி, விஷ்ணு லோகம் சகச்சதி, விஷ்ணு லோகம் சகச்சதி...."

என்று பல முறை சொல்லி ஸ்னானம் செய்யவும்..

பின்னர் 1008 முறை (108 ஆவது ), பிராயச்சித்தமாக, காயத்ரி ஜபம் செய்வது விதிக்கப்பட்டுள்ளது..


5) மஹா சங்கல்ப ஸ்னானம் ஏன் ?

அதிக்ரூரமான கலிபுருஷனால் ஆட்கொள்ளப்பட்ட நாம், மகா சங்கல்பத்தால், முக்திப்பாதையை நோக்கி திருப்பப்படுவோம்..

இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டி செய்து, ஆளுபவன் யார், அவன் எங்கிருக்கிறான்?, இந்த பூமி அவன் கட்டுப்பாட்டில் எப்படி இருக்கிறது?, நாம் அவன் ஆளுகையில் இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு, நாம் செய்த பாவங்களை நினைத்து, பிராயச்சித்தம் செய்து, பரமேஸ்வரனின்/ஸ்ரீஹரியின் அருளால், கால பைரவரின் அருளால், புண்ணிய தீர்த்த ஸ்னான பலன் பெற்று, இந்த பாவக்கடலை கடந்து, புண்ணிய கங்கையையும் கோவிந்தனையும் நினைந்து, 
விஷ்ணு லோகம் அடைவோம்!!

6) காமோகர்ஷீத் மன்யுஆகர்ஷீத் ஜபம் என்பது ஏன்?

காமமும், மனோகல்பிதமும் (மனுவின் சுழற்சியும்) நம்மை ஆட்கொள்ளும் பொழுது செய்யும் பாவச்செயல்களை விடுகிறேன் என்று சங்கல்பம் செய்து, அதையே 1008/108 முறை தியானித்து, பாவத்திலிருந்து முக்தி பெற இது விதிக்கப்பட்டுள்ளது...

7) பிராயச்சித்த காயத்ரி ஜபம் ஏன் ?

நாம் இம்மூன்று உலகங்களை (பூ, புவ, சுவர்க்க) ஆளுபவன் யார் (ஸ்ரீஹரி/மஹாதேவன்) என்று தினமும் நினைக்க வேண்டும்..










அவனுடைய தேவர் குழாம், நம்மை அப்போது சூழும். 

அவனுடைய ஆதித்ய தேவனும், நம் அஞ்ஞானத்தை விலக்கி,
தேஜோமயமான ஞானத்தை நமக்களிப்பான்..

இதை செய்யாமல் விட்டுவிடும் பொழுது, பாவங்களில், அஞ்ஞானத்தில் மாட்டிக்கொள்கிறோம்..

வருடமொருமுறையாவது, நம்மை நாம் புதுப்பித்து கொள்ள, உபாகர்மா - பிரம்ம யஃஞம், மஹாசங்கல்பம், காமோகர்ஷீத் மன்யுஆகர்ஷீத் ஜபம், பிராயச்சித்த சஹஸ்ர காயத்ரி ஜபம் உதவுகிறது.


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்
(தொடரும்)


http://brahminrituals.blogspot.com/2018/07/what-is-avani-avittam-or.html

http://bharathavamsavali.blogspot.com/2022/06/blog-post.html

http://bharathavamsavali.blogspot.com/2022/06/life-and-nature-basic-and.html

http://bharathavamsavali.blogspot.com/2021/10/blog-post.html

http://bharathavamsavali.blogspot.com/2021/08/blog-post.html

http://bharathavamsavali.blogspot.com/2020/01/sahasra-yojana-teshaam-sahasra-yojane.html