Saturday, June 4, 2022

சந்திர நட்சத்திர (ஆதித்ய) ஆரம் மற்றும் சந்திர ஆதித்ய ஆரம் அதற்கு நேரெதிரான சந்திர தைத்திய விகிதம் தொடர்பு (திதி) என்பதென்ன - பாகம் 2?

 


சந்திர நட்சத்திர (ஆதித்ய) ஆரம் யாது ?

ஜோஸ்ய சாஸ்திரம் சொல்லும் பாதை சந்திர நட்சத்திர (ஆதித்ய) ஆரம் பற்றியது.

"ஜனனி ஜென்ம சௌக்யனாம், வர்தனி குல சம்பதாம், பதவி பூர்வ புண்யானாம், லப்யதே ஜென்ம பத்ரிகா..."

இந்த உயிர் பிறந்த இடத்தும், தாய் வகையறா அனைத்தையும் தேவேந்திர சங்கம் பிறப்பிலும், வாழ்க்கையிலும் சௌக்யமாக வைக்கட்டும்..

குல சம்பத்து (அமுத வேத வாழ்க்கையை நோக்கி செலுத்தும் யாவும் ) பெருகட்டும்...

இவர்களுக்கு இவர்தம் பிரம்ம தண்டம் தேவேந்திர சங்கத்தின் அருளால், நியாயத்தை காக்கும் பதவியையும், பூர்வ புண்யத்தை அமுத வேத வாழ்க்கையை நோக்கி செலுத்தும் வழியையையும் அளிக்கட்டும்..

இந்த ஜென்ம பத்திரிகை, இவர்தம் பிரம்ம தண்டத்தை காத்து மேற்கண்டவை இவர்க்கு கிடைக்க அருள் செய்யட்டும். ஓம்.. 




பஞ்சாயதன வர்ணனைகளில் ஈசானத்தை (வடகிழக்கு) குறிக்குமிடத்து,

"வடகிழக்கு / ஈசான திக்கிலிருந்து எல்லா அறிவும் பெறப்பட்டன.
கணபதியும் ப்ரஹ்மாவும் சிவஸ்வரூபமாக அங்குள்ளனர்"

துருவ நட்சத்திரம் (vega constellation) 26000/36000 வருடங்களில் மொத்தமாக மாறும் என்பது திண்ணமோ ( அவ்வப்போது நடக்கும் சிறு மாறுதல்கள் தவிர ) அதுபோலவே கல்பம் என்ற ப்ரம்மாவின் நாள் கணக்கு / ஆயுட்காலம், அந்த மண்டலம் அல்லது அந்த மண்டலியை பொறுத்தது!!







நாம் ஒரு யாகத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு ப்ரஹ்மாவை (விஷ்ணுவின் ஆணைப்படி)  நியமிக்கிறோம்!!! அவர் 2 மணி நேரம் முதல் 4 நாட்கள் வரை அந்த யாக மண்டலத்திற்கு பிரம்மா / பிரஜாபதி / ஞான சூரியனாக இருக்கிறார்.




அது போலவே, இந்த சூரிய மண்டலத்திற்கு, நம் அண்டமான ஆகாய கங்கைக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும், ஸ்ரீஹரி தனித்தனி ப்ரஹ்மாவை நியமிக்கிறார்!!!





தனித்தனி ப்ரஹ்மாவிற்கு கல்ப காலங்கள் மாறுபடும். கணிக்கும் அளவும் மாறுபடும். எந்த பெரு மண்டலத்தின் ஆளுகைக்கு உட்பட்டது என்றும் கொள்ள வேண்டும்...




நமது சூரிய மண்டலம், 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அபிஜித் (வேகா நட்சத்திர கூட்டம் ) மண்டலத்திற்கு உட்பட்டது!!!


27000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தப/ஸத்ய உலகங்கள் (மூலம் / ஸ்வாதி அருகில் உள்ளது ) இந்த சூரிய மண்டலத்தின் கூட்டு உலகங்களாக / மேல் உலகங்களாக ( வ்யாஹரிதி ) குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை நவீன  விஞ்ஞானமும் ஒரு நிலையில் ஏற்கிறது!!





இங்கிருந்து ஒவ்வொரு  27 வருடங்களில் (பித்ரு வருடம்), ஒளி கீற்றுகள், ஜீவ கணக்கு வழக்கோடு, அபிஜித் சென்று விடும் !!! பெரும்பாலான மனிதர்கள் இந்த காலத்திற்கு பின்தான் திரும்பவும் பிறக்கிறார்கள், தேவ சிருஷ்டிகள் தவிர!!




இங்கிருந்து 27,000 வருடங்களில், ஒளி கீற்றுகள், இந்த சூரிய / ஜீவ மண்டலத்தின் கணக்கு வழக்கோடு, தப / ஸத்ய உலகங்கள் இருக்கும் ஆகாய கங்கையின் / அண்டத்தின் மத்திக்கு (ஹனுமானின் மூல நட்சத்திர கூட்டத்திற்கு / saggitarius radio stellar system) சென்று விடும் !!!

இவற்றை கணித்தால் இந்த 2 * 4.32 பில்லியன் / 8.64 ஆண்டுகள், சூரிய குடும்பத்திற்கு ஒரு ஞான சூரியன் ஆட்சி செலுத்தி நம்மை ஆன்மிகத்தால் ஆள்வார்!!!




இந்த உலகத்தை ஸத்ய உலகமாக அல்லது ஒரு அபிஜித்தை போல், மஹ / ஜன உலகமாக, ஸ்ரீஹரியின் ஆளுகைக்குள் கொண்டு வருவார்.

4,32,000 ஆண்டுகள் மனிதர்கள், இங்கு ஏழு சக்ர நிலைகளுடன் உலாவுவார்கள்.




ஒரு 36,000 ஆண்டுகள், சரியாகச்சொன்னால் இன்னும்  10,000 ஆண்டுகள் மனித வாழ்க்கை, தேவ வாழ்க்கையாக மாற காலம் நிச்சயிக்கப்பட்டது.




காலம் இன்னும் இருக்கிறது!!!

இதை அறிந்து கொண்டு, செலவிட்டால் ( இயற்கையை அழிக்காமல்), நமக்கு ஆன்மீக ஸத்ய உலகம் தென்படும்.

"நமோ ப்ரஹ்மனே, நமோஸ்து அஃனயே, நம ப்ரதிவ்யை, நம ஓஷதீப்யஹ, நமோ வாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ரஹதே கரோமி"

- ப்ரஹ்ம யஃன ப்ரார்த்தனை ஸ்லோகம் 




வசிட்டர் கணித்த முறையில் 17 / 22 என்றிருந்த   சந்திர நட்சத்திர (ஆதித்ய) ஆரம், பின்னர் விஸ்வாமித்திரர் கணித்த முறையில் 27 ஆக மாறுகிறது. இது வேகாவின் (vega constellation ) கணக்கோடு ஒத்துப்போகிறது..

27 வருடங்கள், 27 ஒளி ஆண்டுகள் கொண்ட கட்டுப்பாட்டு இயக்கம், 27 நக்ஷத்திர கூட்டங்களாக உருவகிக்க படுகிறது.

இந்த சூர்ய மண்டலத்தை ஒரு சூக்ஷ்ம பிரம்மா அல்லது ஹிரண்யகர்பர் (சூர்ய தேவனோடு சேர்ந்து), 27 நக்ஷத்திர கூட்டத்தோடு இணைக்கிறார்.

27 நக்ஷத்திரம் 4 பாதங்களோடு சேர்ந்து 108 ஆரம் (arc /spoke swept curvature) ஆக மாறுகிறது.




இதனாலேயே 54/108 (ying / yang or diabolical forces ) என்ற அளவில் மணிகளை கோர்த்து ஜெப மாலை செய்கிறோம்..
இந்த உலகம் படைப்பிலிருந்து மாறுபட்டு நரகலோகமாக மாறும் பொழுது அல்லது நிலை தவறும்போது இதை காக்க அருகில் உள்ள தேவேந்திர கூட்டம் முனைகிறது.




விஷ்ணுவின் ஆணைப்படி இந்த உயிர்களை காக்கவும், ஆன்ம விடுதலை அளிக்கவும் தேவ உயிர்கள் இங்கு வருகிறார்கள் (காஞ்சி மஹாஸ்வாமியின் கடைசி மொழிகளை கேட்கவும் ).

33 கோடி தேவர்களின் கூட்டம் ( 12 ஆதித்யர், 11 ருத்ரர், 8 வசுக்கள், 2 அஸ்வினி தேவர்கள் ) இந்த உலகை சத்ய உலகமாக மாற்ற உறுதி பூணுகிறது. பூணூல் அணிந்து சபதமேற்கிறது.

தேவேந்திர சங்கம் அமைகிறது..







பிறப்பாலோ / செயலாலோ ப்ராஹ்மணானாக ஆனவன் (சாந்தி பஞ்சகம், யஃன த்யானம் மற்றும் எல்லா சூக்தங்களில் இது குறிக்கப்படுகிறது),
இந்த தேவேந்திர சங்கத்தை காக்க வேண்டும்!!

அதற்காக உழைக்க வேண்டும்..

அவர்தம் சக்தியை கூட்ட வேண்டும்... 

ப்ரத்யக்ஷ ப்ரஹ்மாவாக (சாந்தி பஞ்சகம்) மாற வேண்டும்!!

அதுவே ப்ராஹ்மணனின் கடமை!! 

விஷ்ணுவின் ஆணைப்படி, விஷ்ணுவின் முகத்திலிருந்து வந்தவனின் வேலை. 

மற்ற வேலை எல்லாம் வீண் வேலை!!




எந்த உயிர்கள் இந்த தேவேந்திர சங்கத்தை சேர்கிறார்களோ அவர்தம் ப்ரஹ்ம தண்டத்தை (இடகலை ஐந்தும் (கணபதி), பிங்களை ஆறும் (சுப்பிரமணியன்) ருத்திரர்களாக,  உயிர் சுஷும்ணை மூலமாக ), சந்திர நட்சித்திர (ஆதித்ய) ஆரத்துடன் இணைக்கும் ஞான வேள்வி நடைபெறுகிறது.

இப்படி செய்யுமிடத்து அவர்தம் உடல் இந்நிலையில் இவ்வுலகிலிருந்து விடுபட்டாலும், தேவ கிருபையால் அது மறுபடியும் பிறக்குமிடத்து, தனது பழைய ப்ரஹ்ம தண்டத்தை சந்திர நட்சத்திர (ஆதித்ய) ஆரத்துடன் இணைக்கும் வழி பிறக்கும்!!!

தேவ ஸ்ருஷ்டியாக இவ்வுலகில் வாழ்வோம்..

இல்லையேல் அது நடவாது அல்லது தவறிப்போம்!!!

பின்னர், தைத்ய மற்றும் தானவர்களின் பிடியில் மாட்டிக்கொள்வோம்!!!

ஒரு ஒப்பு நோக்கு....

கிருத்தவ, புக் ஆப் ரெவெளஷன்ஸ் (book of  revelations) - மறை பொருள்களின் வழிகாட்டி இதை போன்ற 7 உலக வாழ்க்கையையும், கணக்கையும், தேவேந்திர சங்கத்தையும், அதை நெறிப்படுத்தும் கேப்ரியல் (Gabriel / கருடன் ) என்ற தேவதையும் கேப்ரியல் கூட்டத்தின் 12 அபோஸ்லேகளையும் ( 12 ஆதித்யர் ) பற்றியும் கூறுகிறது.
விவிலியத்தில், இசாயா தீர்க தரிசியின் கூற்றுப்படி பிறந்து மரித்த, இயேசுவின் வாழ்க்கையில், கேப்ரியல் தேவதையின் கூட்டத்தை சேர்ந்த இளம் பெண் தேவதை (துர்கா) அவரது கழுவில் ஏற்றும் முன் வந்து அவருக்கு இரு வழி கூறுகிறார்.

இவ்வுலகை ஸத்ய உலகமாக மாற்ற சிலுவையில் மரித்து தனது மகள் சாராவின் மூலம் அதை செய்ய விருப்பமா ? 

அல்லது கேப்ரியல் கூட்டத்தின் அபோஸ்லேகளால் (12 ஆதித்யர்) சைத்தானின் கூட்டத்திடமிருந்து விடுவிக்க கோருகிறீரா ?

அவர் 2000 ஆண்டுகள் முன், மரித்து,  தனது மகள் சாராவின் மூலம் இவ்வுலகில் மறுபடி வந்து வழிகாட்ட புனித தந்தையின் ஆணையை  (ஸ்ரீஹரியாகிய விஷ்ணு) ஏற்று கொள்கிறார்..

ஆனால் புக் ஒப்பி ரெவெளஷன்ஸ் சொல்லும் மஹா பிரளயத்தையும் அனுமதிக்க ஏற்று கொள்கிறார்!!!!

இன்றைய உலகை பார்க்கும் பொழுது (85% காடுகளை அழித்தோம் !!)

அது நெருங்குகிறது...




ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

விஷ்ணு லோகம் ச கச்சதி!!

யாவரும் விஷ்ணு லோகம் அடைவார்களாகுக!!

பூத உடலில் கட்டுண்டிருக்கும் ஜீவ சக்தியே (குண்டலினி) ஏழு யோக  சக்கரங்கள் (Endocrine or ductless glands) வழியாக பயணிக்கும் அல்லது நிலை பெறும்.  நாளமில்லா சுரப்பிகள் யாவும் தன் சுரப்பினாலும், மின்காந்த அலைகளாலும் pituitary மற்றும் உடம்புடன் இயக்கநிலை அடைகின்றன.

நவீன மருத்துவம் நாளமில்லா சுரப்பிகள் பற்றி அறிந்தது 1 சதவிகிதம் மட்டுமே. உடற்கூறு கொண்டு அறிய முடியாத, மாய சக்தி உலகம் இவ்வுடம்பில் உள்ளது.

இதையே சுப்பிரமணிய ச்ருஷ்டி என்கிறோம். 

ஆணவ, கன்மம், மாயா  மலங்களில் இருந்து விடுபட ஒவ்வோர் மனித உயிரையையும் பிரபஞ்சத்துடன், ஏழுலுகங்களுடன் இணைக்கும் கொடியே சக்கரங்கள்.





எப்படி மூளை நரம்புகளால் கட்டுப்படுத்துகிறதோ, நாளமில்லா சுரப்பிகள் தன்னை சுற்றி பாம்பு போன்று  நெளிந்த மின்காந்த அலைகளை (energy field) ஏற்படுத்தி (control system) இயக்க முறையை  உருவாக்குகின்றன. Spinal cord - இதன் நேரடி தொடர்பற்றது. இடகலை ஐந்தும் (கணபதி), பிங்களை ஆறும் (சுப்பிரமணியன்) ருத்திரர்களாக உருவகப்படுத்தபடுகின்றன. இவற்றை யாவரும் உணர்வால் அறிய முடிகிறது. 

சுஷும்ணையை ( Brahma Dhandam ) குருவின் அருளால் அறிய முடியும்.

கீதையில்,

 அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "வேர்களை மேலே கொண்டு, அதன் கிளைகளைக் கீழே கொண்ட நித்தியமான அஸ்வத்தம் {அரச மரம்} என்று ஆத்ம அறிவைச் சொல்கிறார்கள். அதன் இலைகள் சந்தங்களாகும். அதை அறிந்தவன் எவனோ, அவனே வேதங்களை அறிந்தவனாவான். (15:1)



உபநயனத்தின் போது கொடுக்கப்படும் அஸ்வத்த தண்டம் இதை குறிக்கிறது.




ததீசி முனிவர் தனது பிரம்ம தண்டத்தை ( உலகாயதமாக முதுகெலும்பு ) வைத்து இந்திரனை ஒரு வஜ்ராயுதம் செய்து அசுரர்களை அழிக்க சொன்னார் என்பது, நாம் பிரம்ம தண்டத்தால் இந்திரியங்களை அடக்கி அசுர சக்திகளை அழிக்க முடியும் என்பதை உணர்த்தவே...

பிராணாயாமம் (மூச்சை அல்லது உயிரை அடக்குதல்) உயிரின்/பிராண காரணியான ஜீவனின் வாசனைகளை நமக்கு தெளிவுபடுத்தும். எதனால் கட்டுண்டு இருக்கிறோம் என்பதை ஆழ்மனதிற்கு புரிய வைக்கும். கும்பகத்தில் இந்திரியங்கள் ஒடுங்குவதை உணரலாம். இந்நிலையில் குருவின் மூலம் மனதின் கட்டுகள் அவிழ்ந்து மனதே மோக்ஷ காரணியாக மாறும். மனதே மனிதனை கட்டும் கயிறு, அதுவே மோக்ஷ காரணியுமாம்.

ஜீவன் இப்பன்னிரெண்டையும் (சந்திர நட்சித்திர(27), ஆதித்ய(12) ஆரம் - ) உணரும் போது இவ்வுலகில், இச்சூர்ய மண்டலத்தில் நமக்காக வாழும் துவாதச ஆதித்யர்களின் கருவியாக மாறுகிறது. 

12 ஆதித்யர்கள், 27 நக்ஷத்திர கூட்டத்தை 12 ஆக பிரித்து தத்தம் ஆளுகையின்படி நடத்துகிறார்கள். 4 பாதங்களுடன் 27 நக்ஷத்திர கூட்டம் 108 ஆக வியாபிக்கிறது. 

108 ஸஹஸ்ரநாம பாக்களை 27*4 பாதங்களுக்கு சேர்க்கும் நடைமுறையும் இதனாலேயே அமைகிறது. 




இதனால், சந்திர நட்சத்திர (ஆதித்ய) ஆரத்தில் ஜீவன் சேர்ந்து விடுகிறது. இதன் பின்னர்,  பிறப்புகள் யாவிலும் பிரம்ம தண்டத்தோடு செல்கிறது.. 

தானவர்களை நாசம் செய்யும் ருத்திரனாகவே மாறி விடுகிறது!!! 




(ஸ்ரீ ருத்திரம் - தேஷாம் சஹஸ்ர யோஜனே, த்ர்யம்பகம், ருத்திராய விஷ்ணவே ம்ருத்யுர்மே பாஹி மற்றும் அயம் மே ஹஸ்தோ பகவான் போன்ற பாக்கள்)

விஷ்ணு லோகம் ச கச்சதி!!

யாவரும் விஷ்ணு லோகம் அடைவார்களாகுக!!

ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

தத்வமஸி

சிவோஹம்.

ஹரி ஓம்



தொடரும்....



http://bharathavamsavali.blogspot.com/2021/12/blog-post_23.html

http://bharathavamsavali.blogspot.com/2021/08/blog-post.html

http://bharathavamsavali.blogspot.com/2021/07/blog-post.html


No comments: