Wednesday, November 10, 2021

இந்திய தேசமும், தமிழும், ஹிந்து மதமும் இணைந்திருந்ததா ?




வேத ஹிந்து மதம் 

முனிவர் முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

வேதியரை போற்றல் 

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 

ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய

தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!


இந்தியாவின் நில எல்லை - வடக்கு இமய பனிமலை, தென்குமரி மற்றும் கடல்கள்.. கி. மு. 1000-1500

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,

குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,


பாடல்:06 (வடாஅதுபனிபடு) தொகு

தண்ணிலவும் வெங்கதிரும்!


பாடியவர்:காரிகிழார்.

பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

திணை: பாடாண்.

துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.

சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு.


வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,

குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,

கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்

நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது

ஆனிலை உலகத் தானும், ஆனாது,

உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்

தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்

பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,

கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்

சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,

பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,

அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்

பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,

பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!

வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்

நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!

செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை

மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!

ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய

தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!

தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும்,

மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!



தொல்காப்பியம் 

சிறப்புப்பாயிரம்

வட வேங்கடம் தென் குமரி 

ஆயிடைத் 

தமிழ் கூறும் நல்லுகத்து 

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் 

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்



செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு 

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் 

புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் 

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து 

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய


10 


அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து 

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி 

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த 

தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் 

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.


15 

- பனம்பாரனார்

8th century AD / 500-1500 BC as per different historians

9. மரபியல் - நூலே கரகம் முக்கோல் மணையே 

ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. - காலையில் நித்தம், முப்புரி நூலால் தவம் இயற்றலும், தேவ, ரிஷி, பித்ரு கடன் செய்ய செப்பு பாத்திரமும், மூன்று கடன்களை குறிக்கும் த்ரிதண்டி ஆசனமும் அந்தணர்க்கு உரியன..


https://youtu.be/xih0yQPvPyo

https://youtube.com/playlist?list=PLZoB97BGn4X4J2iZKNhMQK1Bk5xu8k_OO

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_01-10

https://www.tholkappiyam.org/sirappupaayiram.php


No comments: