Saturday, July 31, 2021

வேத சாரம் எது ? ஹிந்து சனாதன தர்மம் எங்கு கொண்டு செல்கிறது?

இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு. ஆயிரம் உருவங்கள் உண்டு.எல்லா இடங்களிலும் தீர்க்கதரிசிகள் பிறந்து, அந்த ஒரே இறைவனை, அன்பு  உருவானவனை, சர்வ வல்லமையுள்ளவனையே போற்றுகிறார்கள். 

எல்லாம் ஸ்ரீஹரியின் ரூபமே.

எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் அவனே என்றால், சிவன் உருவிலும் மற்ற தெய்வங்களாக இருப்பவனும் அவனே (சகல பொருள்களிலும் உறைபவன் அவனே ) என்று ஒப்பு கொள்ளுதல் வேண்டும்.

அவனில்லாத வேறு பொருள்கள் இல்லை. 

எந்த தெய்வத்தை எந்த ரூபத்தில் எந்த வழிபாட்டு முறையில் வணங்கினாலும் 

அந்த ஸ்ரீ ஹரியை 

ஒரு இறைவனையே போய் சேருகிறது.

தனது பக்தர் எந்த ரூபத்தில் வழிபடுகிறானோ அந்த ரூபத்திலேயே உருவமற்ற இறைவன் அவன் முன் தோன்றுகிறான்.

ஸ்ரீ பகவத் கீதையிலும் கண்ணன் இதையேதான் விஸ்தாரமாக கூறுகிறான்.

பரமேஸ்வரனும் நானே, கணேஸ்வரனும் நானே, தேவசேனாபதியும் நானே என்று தெளிவாக கூறுகிறான்.

பிரசாரகர்கள் (சம்பளம் வாங்கி பிரசாரத்தை தொழிலாகக் கொண்டவர்கள் ), மதவெறியர்கள், தனது தெய்வமே உயர்ந்தது என்று பேசுபவர்கள் உண்மையறியாத மூடர்கள். மூர்க்கத்தனம் உள்ளவர்கள். சமூகத்தை பிரித்து, மனிதனை வெறிபிடிக்கச் செய்து அதில் தனது முன்னேற்றத்தைக் காணும் படித்த முட்டாள்கள் உலகெங்கிலும் உண்டு. இதுவும் இறைவனின் விளையாட்டே.




எப்படி சூரியன் எல்லா பிறப்புகளுக்கும் காரணமோ, எப்படி எல்லா உடல்களையும் வளரச்செய்கிறானோ, எப்படி தனது வெய்யில் கொடுமையால் எல்லாவற்றையும் அழிக்கிறானோ, அதுபோலவே பஞ்ச பூதங்களும் ( அப்பு , தேயு , வாயு, பிருதிவி, ஆகாசம் ) செய்கின்றன.

இயற்கையில் காணப்படும் எல்லாவற்றிலும், மண், கல் முதல், சூரியன் , கோள்கள், நக்ஷத்திரம், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் அணுக்களும் பரமாணுக்களும் தனது சக்தியால் சுழன்று கொண்டு இருக்கின்றன.

ஒரு வினாடிக்கு வினாடி தனது நிலையில் மாறுபடுகின்றன. 

என்றுமே புதிது புதிதான நிலையில் தோன்றுகின்றன.


பிரணவம் 

பிர -நவம் - மீண்டும் புதிது 

பிர -தக்ஷிணம் - மீண்டும் தெற்கு 

பிர -சாதம் - மீண்டும் அன்னம் 

பிர -சவம் - மீண்டும் உடல் 

பிர -கிருதி - மீண்டும் அதே செயல் 

இவையனைத்தும் 

universal consciousness / universal wisdom, 

என்னும் பேரறிவின் ஆற்றலின்கீழ் கட்டுப்பட்டவையாக உள்ளன. இறந்த காலம், நிகழ் காலம், வரும்காலம் என்னும் பாகுபாடுகள் அதற்கு கிடையாது. 

அப்பேரறிவின் துணை கொண்டு இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வரும் காலத்தையும் ஒருவன் அறிய முடியும்.


இதுவே வேதத்தின் சாரம். கீதையின் சாரம். 

உடல் உள்ள ஒவ்வொன்றும் கர்மா (செயல்படத்தான்) செய்ய வேண்டும். 

உடல் ஒரு மோட்டார் கார் மாதிரி, டிரைவர் ஜீவன் மாதிரி, காருக்குள் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் முதலாளி போன்றவன் பரமாத்மா. இந்த பிரபஞ்சத்தின் "மாலிக்" முதலாளி அவனே.






அவனுடைய "Presence" இருப்பதாலேயே பலவித சக்திகள் தானே தங்கள் காரியத்தை செய்கின்றன. 

இதுவே உண்மை.


மற்றவை பின்பு...

பிரஹ்மஸ்ரீ நா கோபாலகிருஷ்ணன் 

உள்ளகரம், சென்னை 

20-11-1995


http://www.sci-news.com/astronomy/milky-way-map-09098.html

http://www.astro.ucla.edu/~ghezgroup/gc/journey/journey_intro.html


No comments: