Friday, August 5, 2022

ஸ்மார்த்த பிராமணீயம், தமிழ் சித்தாந்த சைவம் - பல ஒற்றுமைகளும், சில வேறுபாடுகளும்

 


"வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க"

- மேற்கண்ட விளக்கத்தை கொடுத்த சேக்கிழார், வடமொழி வேதத்தையும், தமிழ் சைவத்தையும், அதன் ஒப்புமைகளையும் காணவில்லையா?

"வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண்

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்

ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன்

காண் கையில் அனல்  ஏந்தியாடும்

       கானவன் காண் கானவனுக்கு அருள் செய்தான்...."

- அப்பர் திருத்தாண்டகம் 


"நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்"

"மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த"

"நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்"

"ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே"

"துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி"

"கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும்"
"நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும்"
"ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும்"
"மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண்
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண்"
"ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும்
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்"
"மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை"
"நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண்"
"மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி"
"பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே"
"நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே"
"பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே"
"கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே"
"நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு"
"நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற"
"நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா"
"ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே"
"நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன"
"நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த"
"பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண்
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே"
"மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே"
"மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்"
"நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்"
"நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள்"
" உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி"
"கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல்"
"வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே"
"பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட, தேரானை "
"சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட"
"மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற, தீ அவனை "
"நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும்"
"வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும்"
"விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி"
"நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக"
"மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே"
"இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்"
"நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்"
"பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும்"
"பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில்
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே"


அப்பருக்கு வேதம், தமிழ் சித்தாந்த சைவம் புரியவில்லையா?

வாரியார் ஸ்வாமிகள் வரை எல்லோரும் ஒரு பிரமையை கொண்டாடினார்களா?


என்னே அறிவீனம் ?

ஒரு த்வைத மதத்தில் (தமிழ் சித்தாந்த சைவம் எனக்கொள்வோம்), சிவனை, தனி ஆன்மாவில் இருந்து, தனி கடவுளாக தீர்மானிக்கும் முறை கொண்டது மற்றும் "சிவன் எனும் ஆத்ம/ஜீவ/சீவ ரூபமாக ஒரு பொருள் / ஒரே பொருள் உளது" என்று பகர்கின்ற தூய உணர்வு (தூய மோனிசம்/pure monism) என்ற அத்வைத /அறிவியல் கோட்பாடு ஆகிய இரண்டையும்,

 ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக மட்டுமே பார்க்க முடியும்..

 ஒப்பிட முடியாது.. 

 தத்துவத்தை புரிந்து கொள்ளாத பலர் இன்று இந்த ஒப்பிடுகளை, தத்துவ அறிவில்லாமல், மக்களை குழப்ப, செய்கிறார்கள்!!! 

அர்த்தமுள்ள ஒப்பீடுகளைச் செய்யுங்கள்!!


மக்கள் முட்டாள் அல்லர்!!


சாதாரண மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சிவனிடம் பூசை செய்து தனக்கு வரம் வாங்கித்தரும் பூசாரியையும்,

தானே சிவமாகி நின்ற மறை ஞானியையும் 

பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்..


மூடர்களுக்குத்தான் புரிவதில்லை!!!


அமெரிக்காவிலிருந்து - ஜப்பான், ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை 1008 வகையான சிவன் கோவில்கள் உள்ளன..


விழித்து கொள்ளுங்கள்!!!!


https://www.youtube.com/watch?v=ZWU3fnmEpiI


https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/6th-thirumurai/6-87-vaanvan-kaan-vaanavarukkum/

http://tamilconcordance.in/TVRM-APP3-1B.html

Wednesday, August 3, 2022

திருவள்ளுவர் சமணரா / ஹிந்துவா ?

 






Reference - K.A. Nilkantha Sastry, ‘A History of South India – Fourth Edition’

தூய வேத ஸம்ப்ரதாயங்களில் சில மட்டுமே இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும்!!


வேத த்வைத ஸம்ப்ரதாயங்களில் இதற்கு அனுமதி இல்லை..



மற்றவை உருவான விதம், அதன் நோக்கங்கள் இதை அனுமதிக்காது. அனுமதிக்கக்கூடாது..

இதன் காரணம், வேத நெறி தழைத்தோங்க வேண்டும் என்பதே.. துறைகளான த்வைத ஸம்ப்ரதாயங்கள் இதை அனுமதியாது.


ஆனால் அத்வைத சித்தாந்தம், உத்தர மீமாம்சம், யோகம், சாங்க்யம், நியாயம் முதலிய பல ஸம்ப்ரதாயங்களில் (ஹிந்து ஸம்ப்ரதாயங்கள்), இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும்!!


இதிலிருந்து பார்க்கும்பொழுது திருவள்ளுவர் எவ்வளவு முறை ஹிந்து கருத்துகளை பேசினாலும், அவர் மேற்கண்ட ஒரு சம்பிரதாயத்தை சேர்ந்தவராகவோ 

அல்லது 

இறைவனை, வேதம் சொல்லும் விதத்தில் இல்லை என்று மறுக்கும் பிரிவை (பெரும்பாலும் அவர் எழுத்தால், அந்த காலத்தால் சமணம் / ஜெயின் ) சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்றே அனுமானிக்கமுடிகிறது..


"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்த கூலி தரும்" - அவரது சமண தத்துவ அறிவு, தெளிவு அல்லது அத்வைத சித்தாந்தம் ( உத்தர மீமாம்சம், யோகம், சாங்க்யம், நியாயம்) பற்றிய பார்வை இங்கு விளங்குகிறது.


இறைவனை இருக்கிறாரா / இல்லையா என கேள்வி கேட்க அனுமதிக்கும் ஒரு ஸித்தாந்தவாதி மட்டுமே இவ்வளவு பளீரென்று எழுத முடியும்!!


மறந்து விடாதீர்கள்.. இவை சூத்திரங்களாக (மந்திரங்களாக என்றும் கூறலாம் ) எழுதப்பட்டவை. குழப்ப எழுதப்பட்டவை அல்ல..


திருவள்ளுவர் ஹிந்துவாகவே இருந்தாலும், எங்கள் பலரைப்போல்!!,

சமண பௌத்த தத்துவங்களை நன்கறிந்தவர். அவற்றில் சிலவற்றையாவது ஏற்றுக்கொண்டவர் என்பது தெரிகிறது..


ஹிந்து சமண பௌத்த தத்துவங்களை ஒரு அவியலாக மாற்றியுள்ளார் என்பது திண்ணம்.

அதனாலேயே ஏலேலசிங்கன் கதை, திருவள்ளுவர் தனது  உடலை பார்சிகளை போல் பறவைகளுக்கு கொடுக்க சொன்னார் என்று அறிவிக்கிறது!!

சமணராகவோ / வைதீகராகவோ / வைஷ்ணவராகவோ தன்னை அறிவிக்கவில்லை..

சமணமும் / வைஷ்ணவமும் பல காலம் ஒட்டி உறவாடியது எல்லோரும் அறிந்ததே!!!

மொத்தத்தில் அவர் ஒரு வைதீக காம்ய மரபை சேர்ந்தவரா என்பது கேள்விக்குறி தான்? இருந்திருக்கலாம்...


மிகுந்த rational பகுத்தறியும் குணம் கொண்டவர் என்பது திண்ணம்.


சைவ சித்தாந்தம் அவரை நாயன்மாராக்கியது..

ஹிந்து அத்வைத சைவம் அவரை ஹிந்து என்கிறது..


ஏனெனில் 60 விழுக்காடு ஹிந்து வேதத்தையும், மீதம் 40 விழுக்காடு, சமணம், பார்சி இயற்கை தத்துவம், இந்திய / தமிழர் வாழ்வியல், காம தத்துவம், சமூக மற்றும் அரசியல்  தத்துவம் என எல்லாவற்றையும் பேசியுள்ளார்..

"If Thiruvalluvar was a person, He should be a Monist Hindu, Agnostic Hindu or a Jain"

திருவள்ளுவர் என்பது ஒருவரா, அல்லது encyclopedia போன்று பலர் சேர்ந்து பல தலைமுறைகள் சேர்ந்து எழுதிய  ஒரு தொகுப்பு நூலா என்பதே பெருங்கேள்வி!!


ஏனெனில் அதன் பொருள் தாயான ஹிந்து வேதம்,

ஒரு தொகுப்பு நூலே..

பலர் பல காலங்களில் எழுதியவற்றின் தொகுப்பு, வியாசரின் விரிப்புக்குப்பின் அது ஒரு தனது தொகுப்பு முழுமையை அடைந்ததாக கொள்ளலாம்..


ஆனால் வேதத்தின் ஆரம்பத்திலிருந்து அந்தம் வரை, இது  

தேவர்கள் / மஹாதேவன் தாமே முன்வந்து பலர் மூலம் (ரிஷிகள்..) கொடுத்த கொடை இது என்றே புகழ்கிறது / புகல்கிறது...


வள்ளுவமும் அப்படிதான்!!


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


According to legend, at the point of Valluvar’s death, Elelasingan expressed his intention to place Valluvar's corpse in a golden coffin and place it in a monumental grave.[13] Valluvar, however, politely refused and instead requested Elelasingan to tie his corpse with cords and throw it among the bushes outside the town so that scavenging animals can feed on it.[13][14] Elelasingan obeyed and soon observed that the crows and other animals that fed on his corpse "became beautiful as gold."[13] He soon built a temple on the spot where Valluvar's corpse had lain and instituted worship. It is believed that the present temple of Valluvar at Mylapore is built on the site of this ancient temple.[13]


K.A. Nilkantha Sastry, who has written a book, ‘A History of South India – Fourth Edition’ in 2000, published by Oxford Press. On the controversy, Mr. Sastry wrote that Thiruvalluvar was probably a learned Jain Scholar whose works were similar to those of Manu and Kautilya, but he mentioned that none of Thiruvalluvar’s works in the Thirukkural had any mention about his actual religion or even place of birth.


https://en.wikipedia.org/wiki/Elelasingan

https://en.wikipedia.org/wiki/Tower_of_Silence