Thursday, October 27, 2022

சஷ்டி அப்த பூர்த்தி (60), சதாபிஷேகம் (108) / ஸஹஸ்ர பூர்ண சந்திரோதயம் (80.9) / ஸஹஸ்ர பூர்ண சந்திர தர்சனம் போன்றவை ஏன் ?

 


தேவதைகளாக, ரிஷிகளாக வாழ்ந்த முன்னோர்கள் (பித்ருக்கள்), மேல் உலகங்களில் / வ்யாஹ்ருதிகளில் / மனோநிலைகளில் / ஆத்ம நிலைகளில் (dimension ) வாழ்கிறார்கள் (மஹ, தப, ஜன, ஸத்ய) என்பது நம்பிக்கை. 

எவரொருவர் தனக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை (ஸம்ஸ்காரங்கள் உட்பட) சரிவர செய்கிறாரோ, அவர்கள் முன்னோர்கள் / தேவர்கள் / தேவநாதன் அருளால் மேல் வ்யாஹ்ருதிகளை அடைவார்கள் என்பதும் நம்பிக்கை..

இது இந்த யுகத்தில் சாத்தியமா?

சாத்தியமே..

ஸம்ஸ்காரங்கள் பலவற்றை தவற விட்டவர்கள் என்ன செய்யலாம்?

முக்கியமான சௌர்ய / சந்திர சேர்க்கைகளின் ( சஷ்டி அப்த பூர்த்தி (60), ஸஹஸ்ர பூர்ண சந்திரோதயம் (80.9), சதாபிஷேகம் (108) ) போது, தகுந்த வைதீகமான / தெய்வீகமான செய்கைகளின் மூலம், தவற விட்டதை சரி செய்து, ஸம்பூர்ண/பரிபூர்ண/தகுந்த பலன் அடைய ஏதுவாகும்.

இந்த பிராயச்சித்த ஸம்ஸ்காரங்கள் எதையும் செய்ய தேவையில்லை.. செய்ய மாட்டேன் என்று கதை கட்டும் ஒரு பழக்கம் பெருகி வரக்காணலாம்..

அதற்கு ஏதேதோ மட்டித்தனமான காரணங்கள் எல்லோராலும் சொல்லப்படுகின்றன.

இந்த பிராயச்சித்தம் செய்வதே, வந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பதால் தான்..

ப்ராயச்சித்தமும் செய்ய மாட்டேன் என்று சொன்னால், பல அநுபவப்பூர்வமான பலன்களை இழக்க வேண்டி வரும்..

அவரவர் (பிராயச்சித்தம் செய்யாதவர்), தான் செய்யாமல் விட்ட ஸம்ஸ்காரங்கள் எல்லாவற்றையும் வரிசையாக எழுதிவைத்து பின் யோசிக்கலாம்..










No comments: